பதிவு செய்த நாள்
25 செப்2019
00:27
தமிழகத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானியத்தை, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு, விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது என, தொழில் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில், தொழில் துவங்கும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், முதலீட்டில், 25 சதவீதம் மானியமாக, தமிழக அரசு வழங்குகிறது. இதில், அதிகபட்ச தொகையாக, 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.இந்த நிலையில், இந்த உச்ச வரம்பை, 50 லட்சம் ரூபாயாக உயர்த்தி, 110 விதியின் கீழ், தமிழக முதல்வர், ஜூலை, 12ம் தேதி, அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு, விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இந்த அறிவிப்பு, விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதையடுத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில், முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|