பதிவு செய்த நாள்
02 அக்2019
01:27
புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி, செப்டம்பர் மாதத்தில், எந்த பெரிய மாறுதலும் இல்லாமல் இருப்பது, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த, ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், செப்டம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னேற்றம்அதில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகள் அதிகரிக்காததால், நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி, செப்டம்பர் மாதத்தில் எந்த மாற்றமும் காணாமல், பழைய நிலையே நீடிப்பதாக கூறப்பட்டுள்ளது.இது குறித்து, ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:இந்தாண்டு, செப்டம்பர் மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 51.4 புள்ளிகளாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திலும் இதே நிலையில் தான் இருந்தது. இதையடுத்து, இந்த இரு மாதங்களிலும், பி.எம்.ஐ., குறியீடு, 2018 மே மாதத்துக்கு பிறகான குறைவாக தொடர்கிறது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். செப்டம்பர் மாதத்தில், இக்குறியீடு, 51.4 புள்ளிகளிலேயே இருப்பதன் மூலம், வளர்ச்சி இருப்பினும் போதுமான முன்னேற்றம் இல்லாமல் இருப்பதை உணர்த்தி உள்ளது.
நம்பிக்கைதேவை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவை, எதிர்வரும் ஆண்டில் உற்பத்தியை அதிகரிக்க உதவும் என சில நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உள்ளன.மற்ற நிறுவனங்கள், கடினமான சந்தை நிலவரம் மற்றும் போட்டி அழுத்தங்கள் ஆகியவை குறித்து கவலையுடன் இருக்கின்றன.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், உற்பத்தி துறையின் நிலை படிப்படியாக குறைந்து வருவதை காணமுடிகிறது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பி.எம்.ஐ., குறியீட்டு எண்கள் மூலம், பொருளாதார வளர்ச்சி குறைவு, பணவீக்க அழுத்தம் ஆகிவை குறித்து அறிய முடிகிறது. எனவே, நாங்கள் மீண்டும் ஒரு வட்டி குறைப்பை எதிர்வரும் மாதங்களில் எதிர்பார்க்கிறோம்.பாலியானா டி லிமா தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ் மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|