பதிவு செய்த நாள்
08 அக்2019
23:40
புதுடில்லி:அமெரிக்கா
மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மோதல் காரணமாக,
சீன ஏற்றுமதியில் பெரும்பகுதியை, இந்தியா வெல்ல முடியும் என,
’கிரெடிட் சுயிஸ்’ நிறுவனம் கூறியுள்ளது.
’அமெரிக்காவுக்கும்
சீனாவுக்கும் இடையேயான வர்த்தக மோதலில் பயனடையும் நாடுகளில்,
இந்தியா முக்கியமானதாக இருக்கும்.வர்த்தக மோதல் காரணமாக, 35,000 முதல் -55,000 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதி, சீனாவை விட்டு வெளியேறும்.இதில்
பெரும்பகுதியை, இந்தியாவால் கைப்பற்ற முடியும்’ என,
சுவிட்சர்லாந்தை சேர்ந்த, பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதி
ஆலோசனை நிறுவனமான, கிரெடிட் சுயிஸ்தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள மிகப்பெரும், 100 நிறுவனங்களில், இது குறித்து
கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.அதில், இந்தியாவுக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:சீனாவில்
உள்ள
நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை வியட்நாம், இந்தியா, தைவான்
மற்றும்
மெக்ஸிகோவுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக
தெரியவந்துள்ளது.
பல நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறி, வேறு இடங்களில் உற்பத்தியை துவக்க
ஆர்வமாக இருக்கின்றன.இதற்கு
அவர்கள் பட்டியலிடும் காரணங்களில் முக்கியமான ஒன்று, சுருங்கி
வரும் சீன தொழிலாளர்கள். அந்நாட்டின் தொழிலாளர்களின் எண்ணிக்கை
சுருங்கி வருகிறது.
கடந்த, 2015லிருந்து இதுவரை, 2 கோடி
தொழிலாளர்கள் குறைந்துவிட்டனர். இது மேலும், 90
லட்சத்தில் இருந்து, 1.5 கோடி சுருங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.இவை தவிர,
அமெரிக்காவின் இறக்குமதி வரி, தேவை குறைவு ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்தி
உள்ளன.இதன் காரணமாக, அவர்கள் வியட்நாம், இந்தியா, தைவான் போன்ற நாடுகளுக்கு தொழிற்சாலைகளை மாற்ற திட்டமிடுகின்றனர்.
அமெரிக்காவில்,
சீனப் பொருட்களுக்கு இறக்குமதி வரி மேலும் அதிகரிக்கும் நிலையில்,
பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.இப்போதுதான்,
சீனாவிலுள்ள நிறுவனங்கள் உச்ச நிலை அழுத்தத்தை உணர்கின்றன.
காரணம், அங்கு முழுமையாக தயாரிக்கப்பட்ட
பொருட்களில், 80 சதவீத
பொருட்கள், அமெரிக்காவின் அதிக இறக்குமதி வரியால்
பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு பதிலாக, பிற இடங்களுக்கு, சீனாவிலுள்ள நிறுவனங்கள் இடம் பெயரும்.இதையடுத்து,
24.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 38.5 லட்சம் கோடி ரூபாய்
மதிப்பிலான ஏற்றுமதி, சீனாவை விட்டு வெளியேறும். பிற நாடுகள்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதைப் பொருத்து, இது மேலும்
அதிகரிக்கும். என
கருதுகிறோம்.இவ்வாறு கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சுற்று பேச்சு
அமெரிக்காவும்,
சீனாவும் வர்த்தக மோதல் குறித்த, அடுத்த சுற்று பேச்சை நாளை நடத்த
இருப்பதாக, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.கட்டாய தொழில்நுட்ப
பரிமாற்றம்,
அறிவுசார் சொத்துரிமை, சேவைகள், விவசாயம்
உள்ளிட்டவை குறித்து பேச்சு நடத்தப்படும் என தெரிகிறது. உலகின்,
இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே அதிகரித்து வரும் மோதல்
போக்கு, நிறுவனங்களின் பங்கு விலைகளை குறைத்து, உலகப்
பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில்,
நாளை நடைபெறும் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|