பதிவு செய்த நாள்
11 அக்2019
00:08
சென்னை:தனியார் துறை வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி, தேவையான மூலதனத்தை திரட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் என தெரிவித்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியை, இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்துடன் இணைப்பதை அங்கீகரிக்க, ரிசர்வ் வங்கி மறுத்துவிட்டது. இந்நிலையில், தேவையான நிதியை திரட்டும் முயற்சியை தொடரவிருப்பதாக, லட்சுமி விலாஸ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து, இவ்வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இணைப்பு குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, தேவையான நிதியை, அனுமதிக்கப்பட்ட முறைகளின் படியும், அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு திரட்டுவதற்கான முயற்சியை வங்கி மேற்கொள்ளும்.
வங்கி, 90 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்டதாகும். 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் டெபாசிட் பெற்றுள்ளது. மூன்று தலைமுறையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது.இவ்வாறு வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|