பதிவு செய்த நாள்
13 அக்2019
00:00
கோல்கட்டா:ஜியோவின் சமீபத்திய கட்டண அறிவிப்புக்குப் பின், அதிக சந்தை பங்களிப்பை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எதிர்பார்க்கிறது.
சமீபத்தில், ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களின் தொலைபேசிகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டால், நிமிடத்திற்கு, 6 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தது.இந்த அறிவிப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜியோவின் புதிய கட்டண விதிப்பு, எங்களுக்கு சாதகமாக அமையும் என கருதுகிறோம். மேலும், ‘4ஜி’ அலைவரிசையும் விரைவில் கிடைக்கும் என கருதுகிறோம். இத்தகைய காரணங்களால், எங்கள் சந்தை பங்களிப்பு, 3 முதல், 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், எங்களுடைய சந்தை பங்களிப்பு, 6 சதவீதமாக உள்ளது. இது, 10 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
தேசிய அளவில், 12 சதவீதமாக அதிகரிக்கும் என கருதுகிறோம்.சமீபத்திய நிகழ்வுகள், எங்களுக்கு வளர்ச்சி வேகத்தை அதிகரித்து, அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்கள் சேர்வதற்கு வழிவகுக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|