பதிவு செய்த நாள்
13 அக்2019
00:02
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இம்மாதம், 4ம் தேதியுடன் முடிவடைந்த முதல் வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு, 424 கோடி டாலர் அதிகரித்து, மொத்தம், 43 ஆயிரத்து, 783 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு, 502 கோடி டாலர் அதிகரித்து, 43 ஆயிரத்து, 359 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:
மதிப்பீட்டு காலத்தில், எப்.சி.ஏ., எனும், அமெரிக்க கருவூல ரசீதுகள் உள்ளிட்ட, வெளிநாட்டு நாணய சொத்துக்களின் உயர்வு காரணமாக, அன்னிய செலாவணி இருப்பு, அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில், எப்.சி.ஏ., 399 கோடி டாலர் உயர்ந்து, 40 ஆயிரத்து, 561 கோடி டாலராக அதிகரித்துள்ளது.மேலும் மதிப்பீட்டு காலத்தில் தங்கம் இருப்பானது, 23.2 கோடி டாலர் அதிகரித்து, 2,717 கோடி டாலராக உயர்ந்துள்ளது.பன்னாட்டு நிதியத்துடனான இருப்பு நிலையும், 90 லட்சம் டாலர் அதிகரித்து, 361 கோடி டாலராக உயர்ந்துள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|