பதிவு செய்த நாள்
13 அக்2019
00:07
புதுடில்லி:பரோடா அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமும், பி.என்.பி., பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனமும் ஒன்றிணைய உள்ளன.
இந்த இரு நிறுவனங்களும், தங்கள் வணிகத்தை ஒன்றிணைப்பதன் மூலம், சில்லரை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு தயாரிப்புகளை வழங்குவது, மேலும் எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளன.இவ்விரு நிறுவனங்களும், இணைப்புக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருப்பினும், ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதியை பொறுத்தே, இந்த இணைப்பு நடந்தேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பேங்க் ஆப் பரோடா’ மற்றும் ’பி.என்.பி., பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் ஆசியா’ ஆகியவை, இந்த இணைப்பு குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக, இரு நிறுவனங்களும் கூட்டு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளன.‘பரோடா அசெட் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், ‘பேங்க் ஆப் பரோடா’வுக்கு முழுக்க சொந்தமான, ஒரு துணை நிறுவனமாகும். அதேபோல், ‘பி.என்.பி., பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் இந்தியா’ நிறுவனம், ‘பி.என்.பி., பரிபாஸ் அசெட் மேனேஜ்மென்ட் ஆசியா’வுக்கு சொந்தமான ஒன்றாகும்.
இதுகுறித்து, ‘பேங்க் ஆப் பரோடா’வின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, பி.எஸ்.ஜெயகுமார் கூறியதாவது:‘பி.என்.பி., பரிபாஸ்’ போன்ற உலகளாவிய நிறுவனத்துடன் கூட்டு சேர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டு முயற்சி, இந்திய மியூச்சுவல் பண்டு துறையில், ஒரு வலுவான நிறுவனத்தை உருவாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|