பதிவு செய்த நாள்
27 அக்2019
04:25
மும்பை: இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, தொடர்ந்து அதிகரித்து, இதுவரை இல்லாத உயரத்தை தொட்டுள்ளது.நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த, 18ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு, இந்திய மதிப்பில், 7.4 கோடி ரூபாய் அதிகரித்து, 3,129 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி கையிருப்பு, 13.35 கோடி ரூபாய் அதிகரித்து, 3,122 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாடு நாணய சொத்து மதிப்பு, இந்திய மதிப்பில், 6,610 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து, 29 ஆயிரத்து, 30 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.மேலும், தங்க கையிருப்பும் அதிகரித்து உள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், தங்க இருப்பு மதிப்பு, 582 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து, 1.9 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.பத்திரங்கள் இருப்பின் மதிப்பு, 25 ஆயிரத்து, 844 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|