பதிவு செய்த நாள்
26 அக்2019
04:27
கட்டண குறைப்பு காரணமாக, அரசு கேபிள், ‘டிவி’ இணைப்பை பெற வரும், வாடிக்கையாளர்களுக்கு வழங்க, ‘செட்டாப் பாக்ஸ்’ இல்லை என, ஆப்பரேட்டர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு கேபிள், ‘டிவி’யின் கீழ், 30 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஆர்வம்இவர்களுக்கு சேவை வழங்க, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கேபிள் ஆப்பரேட்டர்கள் செயல்படுகின்றனர்.அரசு கேபிள், ‘டிவி’யின் மாத கட்டணம், 130 ரூபாயாக ஆக.,ல் குறைக்கப்பட்டது.இதன்படி, ஜி.எஸ்.டி., உடன், 154 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த நிலையில், அரசு கேபிள், ‘டிவி’ இணைப்பை பெற, பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது; ஆனால், செட்டாப் பாக்ஸ் வழங்க முடியவில்லை என, புகார் எழுந்துள்ளது.ஒப்பந்தம்இது குறித்து, அரசு கேபிள், ‘டிவி’ ஆப்பரேட்டர்கள் கூறியதாவது:தனியார் கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள், மாத கட்டணத்தை குறைத்ததால், பல லட்சம் அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள், தனியாருக்கு சென்றனர்.
அண்மையில் தமிழக அரசு கேபிள், ‘டிவி’ கட்டணத்தை குறைத்தது. இதையடுத்து, அரசு கேபிள், ‘டிவி’ இணைப்பு கேட்டு, வாடிக்கையாளர்கள், திரும்ப வருகின்றனர்.ஆனால், அவர்களுக்கு வழங்க, செட்டாப் பாக்ஸ் இல்லை. நிர்வாகத்திடம் கேட்டால், கொள்முதல் செய்ய, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது; விரைவில் வரும் என்கிறார்கள்.செட்டாப் பாக்ஸ் தாமதத்தால், விரும்பி வருவோர், விலகி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, செட்டாப் பாக்ஸ் விரைவில் கிடைக்க, கேபிள், ‘டிவி’ நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|