பதிவு செய்த நாள்
27 அக்2019
04:31
புதுடில்லி: ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடுகள், நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 19 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனவரி முதல், செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், உள்நாட்டு ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, 19 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து, 980 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ‘அனராக்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.வணிகப்பிரிவுகடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையில், தனியார் பங்கு முதலீடு, 22 ஆயிரத்து, 720 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த தனியார் பங்கு முதலீடுகள் பெருமளவில் வீடு உள்ளிட்ட குடியிருப்புகள் பிரிவை விட, வணிகப் பிரிவு சொத்துக்களிலேயே அதிகம் செய்யப்பட்டுள்ளதும் ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
அனராக் ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:நடப்பு ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், வணிக ரியல் எஸ்டேட் பிரிவு, 21 ஆயிரத்து, 300 கோடி ரூபாய் நிதியை பெற்றுள்ளது. இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 14 ஆயிரத்து, 910 கோடி ரூபாய் அளவுக்கே பெறப்பட்டிருந்தது.இதற்கு மாறாக, குடியிருப்பு பிரிவில், மதிப்பீட்டு காலத்தில், 2,094 கோடி ரூபாய் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் இதுவே, 1,491 கோடி ரூபாயாக இருந்தது.சில்லரை பிரிவில், மதிப்பீட்டு காலத்தில், 1,846 கோடி ரூபாய் தனியார் பங்கு முதலீட்டிலிருந்து பெறப்பட்டுஉள்ளது.
இதுவே, கடந்த ஆண்டில், 2,520 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கிடங்குகள் பிரிவில், 27 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 1,952 கோடி ரூபாயாக இருந்தது, நடப்பு ஆண்டில், 1,420 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.நகரங்களைப் பொறுத்தவரை, மும்பை மாநகர பகுதியில், அதிகபட்சமாக செப்டம்பர் மாதம் வரை, 11 ஆயிரத்து, 289 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 3 சதவீதம் அதிகம்.சென்னைசென்னையை பொறுத்தவரை, 1,633 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதுவே, இதே காலகட்டத்தில், 1,136 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.பெங்களூரை பொறுத்தவரை, 3,479 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது, 17 சதவீதம் அதிகம்.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், 2,982 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே தனியார் பங்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன.வெளிநாட்டு தனியார் பங்கு முதலீடுகளை பொறுத்தவரை, அதிக அளவில் ரியல் எஸ்டேட் பிரிவிலேயே செய்யப்பட்டு வருகிறது. ‘பிளாக்ஸ்டோன், ஹைன்ஸ், அசென்டாஸ், புரூக்பீல்டு’ போன்ற நிறுவனங்கள் பெருமளவு இந்தியாவில் முதலீடு செய்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|