பதிவு செய்த நாள்
23 நவ2019
03:50
மும்பை: திவால் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும், டி.எச்.எப்.எல்., நிறுவனத்துக்கு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை, ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
நிர்வாக பிரச்னை, கடுமையான பணப்புழக்க நெருக்கடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான, டி.எச்.எப்.எல்., மீது திவால் நடவடிக்கை எடுக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை கலைத்து விட்டு, அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.ரிசர்வ் வங்கி சார்பில், இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.சுப்பிரமணிய குமார் நியமிக்கப்பட்டுஉள்ளார்.இந்நிலையில், திவால் சட்டத்தின் கீழ், டி.எச்.எப்.எல்., நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் வகையில், சுப்பிரமணிய குமாருக்கு ஆலோசனை வழங்க, மூன்று பேர் கொண்ட குழுவை, தற்போது ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்கின் செயல்சாரா தலைவர் ராஜிவ் லால், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.கண்ணன், மியூச்சுவல் பண்ட் சங்கமான, ‘ஆம்பி’யின் தலைமை நிர்வாகி என்.எஸ்.வெங்கடேஷ் ஆகிய மூவரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.புதிய திவால் சட்டத்தின் கீழ் முதல் முறையாக, டி.எச்.எப்.எல்., மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|