போர்ஜிங் துறையினர் கோரிக்கை போர்ஜிங் துறையினர் கோரிக்கை ...  புள்ளி விபரங்களை வெளியிடுங்கள் பொருளாதார அறிஞர்கள் கோரிக்கை புள்ளி விபரங்களை வெளியிடுங்கள் பொருளாதார அறிஞர்கள் கோரிக்கை ...
டி.எச்.எப்.எல்., திவால் விவகாரம் அமைக்கப்பட்டது ஆலோசனை குழு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2019
03:50

மும்பை: திவால் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கும், டி.எச்.எப்.எல்., நிறுவனத்துக்கு, மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுவை, ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.

நிர்வாக பிரச்னை, கடுமையான பணப்புழக்க நெருக்கடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான, டி.எச்.எப்.எல்., மீது திவால் நடவடிக்கை எடுக்க, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இதையடுத்து, இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழுவை கலைத்து விட்டு, அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.ரிசர்வ் வங்கி சார்பில், இந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்ய, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஆர்.சுப்பிரமணிய குமார் நியமிக்கப்பட்டுஉள்ளார்.இந்நிலையில், திவால் சட்டத்தின் கீழ், டி.எச்.எப்.எல்., நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் வகையில், சுப்பிரமணிய குமாருக்கு ஆலோசனை வழங்க, மூன்று பேர் கொண்ட குழுவை, தற்போது ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.

ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்கின் செயல்சாரா தலைவர் ராஜிவ் லால், ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் நிர்வாக இயக்குனர் என்.எஸ்.கண்ணன், மியூச்சுவல் பண்ட் சங்கமான, ‘ஆம்பி’யின் தலைமை நிர்வாகி என்.எஸ்.வெங்கடேஷ் ஆகிய மூவரும் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.புதிய திவால் சட்டத்தின் கீழ் முதல் முறையாக, டி.எச்.எப்.எல்., மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)