பதிவு செய்த நாள்
23 நவ2019
03:49
சென்னை: ‘‘இந்திய போர்ஜிங் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, நடப்பு நிதி ஆண்டில், 30 சதவீதம் சரிவை கண்டுள்ளது,’’ என, இந்திய போர்ஜிங் நிறுவனங்களின் சங்க தலைவர் எஸ்.முரளி சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மேலும் அவர் கூறியதாவது:போர்ஜிங் நிறுவனங்கள், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதிரி பாகங்களை தயாரித்தளிக்கின்றன; மூன்று லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகின்றன.கடந்த, 2017 – 18, 2018 – 19ம் நிதி ஆண்டுகளில், ஆண்டுக்கு, 10 சதவீதம் வளர்ச்சி போர்ஜிங் துறையில் இருந்தது. ஆனால், நடப்பு நிதி ஆண்டில், 30 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களது வாகன உற்பத்தியை குறைத்ததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த துறை மீண்டும் வளர்ச்சியை எட்ட, ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள், வாகன ஸ்கிராப்பிங் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.போர்ஜிங் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தவணை தொகையின் அவகாசம் கடந்து விட்டால், அதை உடனடியாக வாராக் கடனாக அறிவிக்கக் கூடாது. இந்த கோரிக்கைகளை, மத்திய அரசிடம் கொடுத்துள்ளோம். இவ்வாறு முரளி சங்கர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|