பதிவு செய்த நாள்
24 நவ2019
02:58
புதுடில்லி : ‘முத்துாட் பைனான்ஸ்’ நிறுவனம், ‘ஐ.டி.பி.ஐ., அசெட் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம், மியூச்சுவல் பண்டு துறையினுள் முதன் முதலாக நுழைகிறது.
இது குறித்து, முத்துாட் பைனான்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:ஐ.டி.பி.ஐ., அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை, 215 கோடி ரூபாயில் கையகப்படுத்த உள்ளோம். இதற்கான செபியின் அனுமதியைப் பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து, பிப்ரவரி மாதத்திற்குள் கையகப்படுத்துவது நிறைவு பெறும் என கருதுகிறோம்.ஐ.டி.பி.ஐ., அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் ‘ஐ.டி.பி.ஐ., மியூச்சுவல் பண்டு டிரஸ்டி கம்பெனி’ ஆகியவற்றை கையகப்படுத்துவதற்கான உறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்த இரு நிறுவனங்களின், 100 சதவீத பங்குகளை வாங்க, 215 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற இந்நிறுவனங்களை வாங்குவதன் மூலம், மியூச்சுவல்பண்டு துறையிலும் முத்துாட் நுழைகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐ.டி.பி.ஐ., வங்கியால் உருவாக்கப்பட்ட, ஐ.டி.பி.ஐ., மியூச்சுவல் பண்டு, லாபகரமாக இயங்கி வரும் நிறுவனமாகும். 22 திட்டங்களில், 5,300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|