பதிவு செய்த நாள்
30 நவ2019
02:05
புதுடில்லி : நாட்டின், முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.8 சதவீதமாக குறைந்துள்ளது.
பொருளாதார மந்தநிலையின் தீவிரத்தை குறிப்பதாக, இந்த சரிவு அமைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.மதிப்பீட்டு மாதத்தில், நிலக்கரி உற்பத்தி, 17.6 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் உற்பத்தி, 5.1 சதவீதமும்; இயற்கை எரிவாயு, 5.7 சதவீதமும் குறைந்து உள்ளன.சிமென்ட் உற்பத்தி, மைனஸ் 7.7 சதவீதமும்; உருக்கு, மைனஸ் 1.6 சதவீதமும்; மின்சாரம், மைனஸ் 12.4 சதவீதமும் குறைந்துள்ளன.
அக்டோபரில் ஒரே ஒரு துறை மட்டுமே வளர்ச்சியை காட்டியுள்ளது; அது, உரங்கள் துறை. இத்துறை உற்பத்தி வளர்ச்சி, மதிப்பீட்டு மாதத்தில், 11.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. சுத்திகரிப்பு பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி அக்டோபரில், 0.4 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில் இது, 1.3 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தது.கடந்த செப்டம்பரில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 5.1 சதவீதமாக, 10 ஆண்டுகளில் இல்லாத சரிவை கண்டது.
கடந்த ஏப்ரல் முதல், அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி, 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 5.4 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|