பதிவு செய்த நாள்
07 டிச2019
00:28
புதுடில்லி:அடிப்படை ஆதாரத்துக்கான ஆவணங்கள் இன்றி தெரிவிக்கப்படும் புகார்கள் மீது, இனி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, செபியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இனிமேல் முதலீட்டாளர்கள் தாங்கள் யார் என்பதை தெரியப்படுத்தி, புகார்களுக்கு தேவைப்படும் ஆவண ஆதாரங்களையும் அளித்தால் மட்டுமே, அவர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பல புகார்களில், வழங்கியவரை மீண்டும் தொடர்பு கொள்ள முடிவதில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செபி இம்முடிவுக்கு வருவதற்கு, சாருல் சிங் என்ற பெயரில் புகார் வழங்கியவர் காரணமாகி இருக்கிறார்.இவர், எம்.ஐ.ஐ., எனும் உள்கட்டமைப்பு நிறுவனத்துக்கு எதிராக பல புகார்களை அளித்து வந்துள்ளார். தொடர்ச்சியாக பல புகார்களை தெரிவித்து, ஒவ்வொன்றின் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளார்.இதற்காக அவர், எந்த அடிப்படை ஆதாரங்களையும் வழங்கவில்லை.
இதையடுத்து, ஆராய்ந்தபோது அவர் பெயர் போலியானது என்பதும், அவர் வழங்கிய தொலைபேசி எண், முகவரி தவறானது என்பதும் தெரிய வந்துள்ளது. அவரது, ‘இ – மெயில்’ மூலமாகவும் எந்த பதிலையும் பெற இயலவில்லை.இதையடுத்தே இம்முடிவுக்கு செபி வந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|