பதிவு செய்த நாள்
07 டிச2019
23:57
புதுடில்லி:‘கார்ப்பரேட்’ வரி விகிதத்தை, அனைத்து நிறுவனங்களுக்கும், 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என, இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., பட்ஜெட்டை
முன்வைத்து, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
தேவையை அதிகரிப்பதற்கும், வளர்ச்சியை துாண்டுவதற்கும், தனிநபர் வருமான வரியை குறைப்பதோடு, கார்ப்பரேட் வரியை, மூன்று ஆண்டு காலத்துக்கு, அனைத்து
நிறுவனங்களுக்கும், 15 சதவீதமாக குறைக்க வேண்டும் என, இவ்வமைப்பு கோரிக்கை
வைத்துள்ளது.
பரிந்துரை
வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே உடனான, பட்ஜெட்டுக்கு முந்தைய
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற, இந்திய தொழிலக கூட்டமைப்பு, நுகர்வு மற்றும்
முதலீடுக்கு உத்வேகம் அளிப்பதில், அதிக கவனம் செலுத்த பரிந்துரை செய்துள்ளது.சீரான தன்மையை கொண்டு வரும் வகையில், அனைத்து நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரி,
15 சதவீதமாக மாற்றப்பட வேண்டும்.
எந்த விதிவிலக்குகளும், சலுகைகளும் இல்லாமல், 2023ம் ஆண்டு வரை, கார்ப்பரேட் வரியை அனைத்து நிறுவனங்களுக்கும், 15 சதவீதமாக மாற்ற வேண்டும் என, இக்கூட்டத்தில் இந்திய தொழிலக கூட்டமைப்பு பரிந்துரைத்துஉள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆறாண்டுகளில் இல்லாத அளவாக, 4.5 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது.சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பரில், கார்ப்பரேட் வரியை, 30 சதவீதத்திலிருந்து, 22 சதவீதமாக மத்திய அரசு குறைத்து அறிவித்தது. மேலும், புதிதாக அமைக்கப்படும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, கார்ப்பரேட் வரி, 15 சதவீதமாக
இருக்கும் என்றும் அறிவித்தது.
இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் நம்பிக்கை அதிகரித்து, முதலீடுகளும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இந்நிலையில், அனைத்து நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரியை,
15 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது, இந்திய தொழிலக கூட்டமைப்பு.
விவசாயிகள்
அத்துடன் நுகர்வோர் நம்பிக்கையை அதிகரித்து, அவர்களின் செலவினங்களை அதிகரிக்கத் துாண்டும் வகையில், விவசாயிகளுக்கு, 4,000 ரூபாய் அளவுக்கு நேரடி பணப் பலனை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, சி.ஐ.ஐ., மேலும் தெரிவித்துள்ளதாவது:
நுகர்வு தேவையை அதிகரிக்க வேண்டும் என்றால், அடித்தட்டு மக்களிடம்
செலவழிப்பதற்கான வருமானம் வர வேண்டும். எனவே, தனிநபர் வருமான வரியை, அரசு குறைக்க வேண்டும்.
இதன் மூலம், அவர்களிடம் செலவழிப்பதற்கான பணம் அதிகரிக்கும். இந்த தொகை,
குடும்பங்களின் செலவு மற்றும் சேமிப்புக்கு வழிவகுக்கும்; நுகர்வு தேவையும் அதிகரிக்கும்.மேலும் மத்திய நேரடி வரி வாரியம், ஓய்வு பெற்ற மூத்த அதிகாரிகள் மற்றும் அனுபவம்
மிக்கவர்களைக் கொண்டு, ஒரு மத்தியஸ்த நிபுணர் குழுவை உருவாக்கலாம்.இவர்கள் மூலம், மதிப்பீட்டுக் கட்டத்திலேயே குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரிச் சச்சரவுகளை தீர்க்க முயற்சிசெய்யலாம்.
கிராமப்புற தேவையை அதிகரிக்கும் வகையில், ‘பிரதம மந்திரி கிஸான்’ திட்டத்தின் மூலம், இரண்டு தவணைகளாக விவசாயிகளுக்கு, 4,000 ரூபாயை வழங்கலாம். இது, கிராமப்புற
நுகர்வோர்களுக்குபயனுடையதாக இருக்கும்.கூடவே, கிராமப்புற உள்கட்டமைப்பை,
கிராமப்புற சாலைகளை மேம்படுத்தலாம். நீர்ப்பாசனம் உள்ளிட்ட வேளாண் சந்தை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம்.
அடுத்த நிதியாண்டுக்கான சுங்க வரியை தற்போதிருக்கும், 10 சதவீத உச்ச விகிதத்துடன்
தொடரலாம்.இவ்வாறு இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|