பதிவு செய்த நாள்
11 டிச2019
03:57
புதுடில்லி:செல்போன் எண்ணை மாற்றாமல், நிறுவனங்களை மாற்றிக் கொள்வதற்கான, ஒரே மொபைல் எண் திட்டத்தில், புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, டிராய்.ஒரு நிறுவனத்திலிருந்து வேறு ஒரு நிறுவனத்துக்கு மாறும்போதும், ஏற்கனவே இருக்கும் எண்ணை தொடருவதற்கு உதவும் வகையில், ஒரே மொபைல் எண் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது, இந்த வசதியை விரைவாக பெறுவதற்கு வசதியாக, புதிய விதிமுறைகளை, டிராய் அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய விதிமுறைகள், 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.வாடிக்கையாளர் நிறுவனத்தை மாற்றும்போது, தற்சமயம் சேவையை பெற்று வரும் நிறுவனத்திடமிருந்து, யு.பி.சி., எனும் குறியீட்டை வாங்க வேண்டும். ஆனால் அதை வழங்குவதில் நிறுவனங்கள் தாமதம் செய்து வந்தன.
இனி புதிய விதிமுறைகளின் படி, ஒரே சேவை பகுதிக்குள் மாறுவதாக இருப்பின், மூன்று வேலை நாட்களுக்குள்ளாகவும், ஒரு தொலைதொடர்பு வட்டத்திலிருந்து, இன்னொரு வட்டத்துக்கு மாறுவதாக இருப்பின், 5 வேலை நாட்களுக்குள்ளாகவும் வழங்க வேண்டும். இவ்வாறு டிராய் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|