பதிவு செய்த நாள்
18 டிச2019
12:29
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவார காலமாக புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(டிச.,18, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 129 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 41,480.91ஆக வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும் புதிய உச்சமாக 20 புள்ளிகள் உயர்ந்து 12,199.05ஆக வர்த்தகமானது.
ஜிஎஸ்டி தொடர்பான கூட்டம் நடப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
அதேசமயம் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்தது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ.71.11ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|