பதிவு செய்த நாள்
25 டிச2019
05:15
மும்பை : செப்டம்பர் மாத முடிவில், வங்கிகளின் மொத்த வாராக் கடன், 9.1 சதவீதமாக இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:வாராக் கடன்களை அறியும் பணிகள் நிறைவை அடையும் நிலையில், வங்கிகளின் மொத்த வாராக் கடன், நடப்பு ஆண்டில், செப்டம்பர் இறுதியில், 9.1 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில், 11.2 சதவீதமாக அதிகரித்திருந்தது.அனைத்து வங்கிகளின் நிகர வாராக் கடன், நடப்பு நிதியாண்டில், 3.7 சதவீதமாக குறைந்துள்ளது.
இதுவே கடந்த நிதியாண்டில், 6 சதவீதமாக இருந்தது. மேலும், அனைத்து வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம், தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக அதிகரித்திருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|