பதிவு செய்த நாள்
01 ஜன2020
23:58
புதுடில்லி:புத்தாண்டில், தனியார் நிறுவனங்கள், ஏழு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது என்றும், சம்பள உயர்வு இந்த ஆண்டில், 8 சதவீதமாக இருக்கும் என்றும், ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மை ஹயரிங்கிளப் டாட் காம் அண்டு சர்காரி நாகுரி இன்போ எம்ப்ளாய்மென்ட் டிரண்ட் சர்வே – 2020’ எனும் ஆய்வில், இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இந்த ஆண்டில், ஏழு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் பங்கே அதிகமாக இருக்கும்.இந்த ஆய்வு, 42 முக்கிய நகரங்களில், 12 தொழில் துறைகளில் உள்ள, 4,278 நிறுவனங்களில் எடுக்கப்பட்டது.
சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், ஆமதாபாத், புனே ஆகிய நகரங்கள், புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. இங்கு, 5.15 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். மீதி வேலைவாய்ப்புகள், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ஏற்படுத்தப்படும்.நாட்டின் தென் மண்டலத்தில் மட்டும், 2.15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதற்கடுத்து, வட மண்டலத்தில், 1.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.சம்பளம், ‘போனஸ்’ போன்றவை, இந்த ஆண்டில், ஒற்றை இலக்கத்தில் இருக்கும் என்பது, ‘சர்வே’ மூலம் தெரிய வந்துள்ளது. ஒட்டுமொத்த ஊதிய உயர்வு, 8 சதவீதமாக இருக்கும்.
கடந்த, 2019ல், 6.2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5.9 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டதும் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|