நடப்பாண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்பு நடப்பாண்டில் 7 லட்சம் புதிய வேலைவாய்ப்பு ...  தங்கம் இறக்குமதி 7 சதவீதம் சரிவு தங்கம் இறக்குமதி 7 சதவீதம் சரிவு ...
பி.எஸ்.என்.எல்., பணிகளுக்கு இனி ஒப்பந்த நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2020
23:54

பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு பின், அவர்கள் சார்ந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்த நிறுவனங்களின் வசம் செல்ல உள்ளதாக, அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,லில், நாடு முழுவதும், 1.5 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், பி.எஸ்.என்.எல்.,லில், விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நாடு முழுவதிலிருந்தும், 79 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.


இந்நிலையில், அவர்கள் பணிக்காலம் முடிந்த பின், பி.எஸ்.என்.எல்., நிலை, என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்.,லில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தோரின் பணி காலம், இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் மட்டும், 8,000க்கும் மேற்பட்டோர், விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.அவர்கள் சென்ற பின், பி.எஸ்.என்.எல்., இணைப்பில் பிரச்னை வந்தால், அதை சமாளிக்க, ஒப்பந்த நிறுவனங்களுடன் கைகோர்க்க, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சிறிய இணைப்பு முதல், பெரிய இணைப்புகள் வரை, தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்னைகள் வந்தால், அதை பராமரிக்க எவ்வளவு கட்டணம் வரை வழங்கலாம் என, கணக்கிடப்பட்டு வருகிறது.எனவே, பிப்ரவரி முதல், நிரந்தர பணியாளர்கள் செய்த வேலைகள், பெரும்பாலும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)