பதிவு செய்த நாள்
02 ஜன2020
23:54
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு பின், அவர்கள் சார்ந்த பணிகள் அனைத்தும் ஒப்பந்த நிறுவனங்களின் வசம் செல்ல உள்ளதாக, அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்.,லில், நாடு முழுவதும், 1.5 லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும், பி.எஸ்.என்.எல்.,லில், விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நாடு முழுவதிலிருந்தும், 79 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் பணிக்காலம் முடிந்த பின், பி.எஸ்.என்.எல்., நிலை, என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: பி.எஸ்.என்.எல்.,லில் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தோரின் பணி காலம், இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் மட்டும், 8,000க்கும் மேற்பட்டோர், விருப்ப ஓய்வில் செல்கின்றனர்.அவர்கள் சென்ற பின், பி.எஸ்.என்.எல்., இணைப்பில் பிரச்னை வந்தால், அதை சமாளிக்க, ஒப்பந்த நிறுவனங்களுடன் கைகோர்க்க, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சிறிய இணைப்பு முதல், பெரிய இணைப்புகள் வரை, தொழில்நுட்ப கோளாறு போன்ற பிரச்னைகள் வந்தால், அதை பராமரிக்க எவ்வளவு கட்டணம் வரை வழங்கலாம் என, கணக்கிடப்பட்டு வருகிறது.எனவே, பிப்ரவரி முதல், நிரந்தர பணியாளர்கள் செய்த வேலைகள், பெரும்பாலும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|