பதிவு செய்த நாள்
07 ஜன2020
01:38
புதுடில்லி:'மக்களின் கார்' என, ரத்தன் டாடாவால் அறிமுகம் செய்யப்பட்ட, 'டாடா நானோ' கடந்த ஆண்டில், ஒன்று கூட தயாரிக்கப்படவில்லை. மேலும், கடந்த ஆண்டில், பிப்ரவரியில் மட்டும் ஒரே ஒரு கார் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.இதற்கு முந்தைய ஆண்டான, 2018ல், டிசம்பர் மாதத்தில் மட்டும், 82 கார்கள் தயாரிக்கப்பட்டன.
மொத்தம், 88 கார்கள் விற்பனை ஆகியிருந்தன.கடந்த, 2018ம் ஆண்டில், நவம்பர் மாதத்தில், மொத்தம், 66 கார்கள் தயாரிக்கப்பட்டு, 77 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.கடந்த ஆண்டில், ஒரு கார் கூட தயாரிக்கப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ இல்லாத நிலையில், இன்னும் காரை தயாரிப்பது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் இருக்கிறது, 'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம்.ஏப்ரல், 1ம் தேதி முதல், 'பாரத் ஸ்டேஜ் 6' விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
அந்த விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில், எந்த முயற்சிகளும் நானோ கார் தயாரிப்பில் இதுவரை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, நானோ கார் தயாரிப்புக்காக, மேற்கொண்டு எந்த முதலீடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், வரும் ஏப்ரல் மாதத்துடன் இந்த கார் முடிவுக்கு வந்துவிடும் என்கின்றனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|