பதிவு செய்த நாள்
07 ஜன2020
23:37
புதுடில்லி:ஏர் இந்தியா பங்குகளை விற்பனை செய்யும் வகையில், ஏலம் விடுவதற்கான வரைவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நேற்று நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் சந்திப்பில், இந்த ஏலம் தொடர்பான வரைவுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோரும் பங்கேற்றனர். ஏர் இந்தியா நிறுவனம் சுமார், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வருகிறது.
இந்நிலையில் நிறுவனப் பங்குகளை விற்க ஏதுவாக, பிரத்யேக நோக்க அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, ஏர் இந்தியா நிறுவனத்தின் கடனை அதன் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப் பட்டது.தற்போது, ஏர் இந்தியாவின், 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனையும், இந்த பிரத்யேக நோக்க அமைப்புக்கு மாற்றவும், அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுவரை இந்த அமைப்புக்கு, 29,400 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில், ஏலத்துக்கான அழைப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|