பதிவு செய்த நாள்
10 ஜன2020
23:59
புதுடில்லி:சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும், ‘கேம்ஸ்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பம் செய்து உள்ளது.
‘கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ என்பதன் சுருக்கமே, கேம்ஸ். இந்நிறுவனத்தில், தேசிய பங்குச் சந்தை, எச்.டி.எப்.சி., வார்பர்க் பின்கஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளன.இந்நிறுவனம், மியூச்சுவல் பண்டு பரிமாற்ற சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.
பங்கு வெளியீட்டின் போது, பங்குதாரர்களின், 1.22 கோடி பங்குகள் விற்கப்பட இருக்கின்றன. இந்த பங்கு விற்பனையின் மூலம், 1,500 கோடி முதல் 1,600 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் கம்பெனி, எச்.டி.எப்.சி., பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், நோமுரா பைனான்ஷியல் அட்வைசரி அண்டு செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 711 கோடி ரூபாய்; லாபம், 131 கோடி ரூபாய்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|