உலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை 2011க்குப் பிறகு அதிகரிப்புஉலகளவில் கம்ப்யூட்டர் விற்பனை 2011க்குப் பிறகு அதிகரிப்பு ... அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.7,100 கோடி முதலீடு அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.7,100 கோடி முதலீடு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரிசர்வ் வங்கிக்கு சோதனையான காலகட்டம் இனி வட்டியை குறைக்காது என்கிறது, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2020
01:40

மும்பை:கடந்த டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 7.35 சதவீதமாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரியில் பணவீக்கம், 8 சதவீதமாக உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.


இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யாது என எதிர்பார்ப்பதாக, எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு அக்டோபரில், சில்லரை விலை பணவீக்கம், 4.62 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, டிசம்பர் மாத நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 8 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இந்நிலையில் அடுத்த மாதம், 6ம் தேதி நடைபெற இருக்கும், நிதிக்கொள்கை குழு கூட்டத்திலும், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், தற்போதைய நிலையே தொடரும் என அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த ஆண்டில், பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், தொடர்ந்து, ஐந்து முறை வட்டிவிகிதத்தை குறைத்து வந்தது, ரிசர்வ் வங்கி. இக்காலகட்டத்தில் மொத்தம், 1.35 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்து அறிவித்தது.


இருப்பினும், கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், நடப்பு, 5.15 சதவீத வட்டியே தொடரும் என அறிவித்தது.
நடப்பு நிதியாண்டில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து இருக்கும் என்ற நிலையில், இந்த ஆண்டு முழுவதுமே வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கலாம். நடப்பு ஆண்டு ஜூன், ஜூலை வரை சில்லரை விலை பணவீக்கம், 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் முன்கூட்டிய மதிப்பீடுகள், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி,5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.உலக வங்கியும், நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி இதே நிலையில்தான் இருக்கும் என தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கியும், 5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.


குறைவான வளர்ச்சி, அதிகமான பணவீக்கம் ஆகியவை நிலவும் சூழலில், வட்டிவிகிதத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கிக்கு இது ஒரு சோதனையான காலகட்டமே.இவ்வாறு, எஸ்.பி.ஐ., எக்கோரேப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வளர்ச்சி, அதிகமான பணவீக்கம் ஆகியவை நிலவும் சூழலில், வட்டிவிகிதத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கிக்கு இது ஒரு சோதனையான காலகட்டமே.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)