பதிவு செய்த நாள்
06 பிப்2020
23:32
புதுடில்லி:மத்திய அரசு, கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஏற்றுமதிக்கு, நிபந்தனைகளுடன் மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.
வெங்காயம் விலை உயர்வு காரணமாக, கடந்த ஆண்டு, அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு மட்டும், நிபந்தனைகளின் பேரில், அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, மார்ச் 31வரை, 10ஆயிரம் டன் கிருஷ்ணாபுரம் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர், ஆந்திர அரசின் தோட்டக்கலை துறையின் சான்றுடன், சென்னை துறைமுகம் மூலமாக மட்டுமே வெங்காயம் ஏற்றுமதி செய்ய வேண்டும்.கிருஷ்ணாபுரம் வெங்காயத்திற்கு, இலங்கை, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், அவ்வெங்காயத்தின் அளவு, அமிலத்தன்மை காரணமாக, இந்திய இல்லத்தரசிகள், கிருஷ்ணாபுரம் வெங்காயத்தை, சமையலுக்கு பயன்படுத்த பெரிதும் விரும்புவதில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|