பதிவு செய்த நாள்
11 பிப்2020
18:09
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பு ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், ஏற்றுமதி தரச்சோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 23 ஆய்வகங்கள் உருவாகின்றன.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த, வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. வேளாண் விளைபொருட்களை, மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக மாற்றுவதன் மூலம், ஏற்றுமதி மதிப்பை உயர்த்த முடியும். ஏற்றுமதி செய்யப்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்புகள், ஆய்வகச் சோதனைக்குப் பின்பே, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.இதன் அடிப்படையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்புகள் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பு, நாட்டில் கூடுதலாக 135 ஆய்வகங்களை உருவாக்குகிறது. இவற்றையும் சேர்த்து, நாட்டில் 186 ஆய்வகங்கள் இயங்கும். இதன்மூலம், ஏற்றுமதி தரச்சோதனைகளை எளிதாக்க முடியும்.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் மட்டும், புதிதாக 23 ஆய்வகங்கள் அமைய உள்ளன. ஆய்வகங்களுக்கான அங்கீகார நடைமுறைகளும் எளிதாக்கப்பட உள்ளன. இதன் மூலம், ஏற்றுமதி அளவை இருமடங்காக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட் உணவுப்பொருள் தயாரிப்புகளை அதிகளவில் ஏற்றுமதி செய்ய இயலும்’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|