பதிவு செய்த நாள்
11 பிப்2020
06:41
புதுடில்லி:கடந்த ஜனவரி மாத இறுதியில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு, 27.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், ஜனவரியில், ஈக்விட்டி பண்டு திட்டங்களில், 7,548 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 70 சதவீதம் அதிகம்.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ கூறியுள்ளதாவது:மியூச்சுவல் பண்டு துறையில் உள்ள, 44 நிறுவனங்கள் மூலமாக, கடந்த ஜனவரி மாதத்தில், 7,548 கோடி ரூபாய், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 4,432 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிட் கேப் பண்டுபங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், மிட் கேப் பண்டுகளில், அதிகபட்சமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மிட் கேப் பண்டுகளில், கடந்த ஜனவரியில் மட்டும், மொத்தம், 1,798 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், மிட் கேப் பண்டுகள் விலை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அதன் மதிப்பீடுகள் ஈர்க்கும் வகையில் இருக்கிறது என்ற காரணத்தால், மிட்கேப் பண்டுகளில் அதிக அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.டெப்ட் பண்டுகளை பொறுத்தவரை, கடந்த ஜனவரியில், மொத்தம், 1,215 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த பண்டிலிருந்து வெளியேறிய தொகை 1,191 கோடி ரூபாய்.லிக்யுட் பண்டுசிக்கலாகி இருக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிலை மேம்படாவிட்டால், அதிக பண இழப்பு ஏற்படும் என முதலீட்டாளர்கள் நினைத்தன் காரணமாக, அதிக முதலீடுகள் இந்த டெப்ட் பண்டிலிருந்து வெளியேறி உள்ளது.
இதற்கு மாறாக, லிக்யுட் பண்டுகளிலிருந்து, கடந்த டிசம்பரில், 71 ஆயிரத்து, 158 கோடி ரூபாய் வெளியேறிய நிலையில், ஜனவரி மாதத்தில், 59 ஆயிரத்து, 682 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.ஆக மொத்தத்தில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்தில், 27.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த டிசம்பரில், 26.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|