வருகிறது இணைய வரி விதிப்பு! வருகிறது இணைய வரி விதிப்பு! ... வேளாண் ஏற்றுமதிக்கு கூடுதல் ஆய்வகங்கள்: கோவை, திருப்பூர், நீலகிரிக்கு வாய்ப்பு வேளாண் ஏற்றுமதிக்கு கூடுதல் ஆய்வகங்கள்: கோவை, திருப்பூர், நீலகிரிக்கு ... ...
‘மியூச்சுவல் பண்டு’களின் சொத்து மதிப்பு உயர்வு:ஜனவரி இறுதியில் ரூ.27.85 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
06:41

புதுடில்லி:கடந்த ஜனவரி மாத இறுதியில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு, 27.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மேலும், ஜனவரியில், ஈக்விட்டி பண்டு திட்டங்களில், 7,548 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, 70 சதவீதம் அதிகம்.
இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ கூறியுள்ளதாவது:மியூச்சுவல் பண்டு துறையில் உள்ள, 44 நிறுவனங்கள் மூலமாக, கடந்த ஜனவரி மாதத்தில், 7,548 கோடி ரூபாய், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், 4,432 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிட் கேப் பண்டுபங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், மிட் கேப் பண்டுகளில், அதிகபட்சமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மிட் கேப் பண்டுகளில், கடந்த ஜனவரியில் மட்டும், மொத்தம், 1,798 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், மிட் கேப் பண்டுகள் விலை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது அதன் மதிப்பீடுகள் ஈர்க்கும் வகையில் இருக்கிறது என்ற காரணத்தால், மிட்கேப் பண்டுகளில் அதிக அளவு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.டெப்ட் பண்டுகளை பொறுத்தவரை, கடந்த ஜனவரியில், மொத்தம், 1,215 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்த பண்டிலிருந்து வெளியேறிய தொகை 1,191 கோடி ரூபாய்.லிக்யுட் பண்டுசிக்கலாகி இருக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் நிலை மேம்படாவிட்டால், அதிக பண இழப்பு ஏற்படும் என முதலீட்டாளர்கள் நினைத்தன் காரணமாக, அதிக முதலீடுகள் இந்த டெப்ட் பண்டிலிருந்து வெளியேறி உள்ளது.
இதற்கு மாறாக, லிக்யுட் பண்டுகளிலிருந்து, கடந்த டிசம்பரில், 71 ஆயிரத்து, 158 கோடி ரூபாய் வெளியேறிய நிலையில், ஜனவரி மாதத்தில், 59 ஆயிரத்து, 682 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.ஆக மொத்தத்தில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகித்த சொத்து மதிப்பு, கடந்த ஜனவரி மாதத்தில், 27.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த டிசம்பரில், 26.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)