பதிவு செய்த நாள்
11 பிப்2020
23:43
புதுடில்லி:தங்கத்தில் முதலீடு செய்யும், ஆவண வடிவிலான, கோல்டு இ.டி.எப்., திட்டங்களில், கடந்த ஜனவரி மாதத்தில், 202 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த, 7 ஆண்டுகளில் இல்லாத அளவாகும்.உலகின் பல்வேறு இடங்களில், புவிசார் அரசியல் காரணமாக எழுந்த அழுத்தங்கள், உலக பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதி, கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீட்டை அதிகரித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாகவே, இத்திட்டத்தில் முதலீடுகள் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.இது குறித்து, இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ஆம்பி தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த ஜனவரியில் முதலீடுகள் அதிகரித்து உள்ளது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரியில், 202 கோடி ரூபாய், கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு முந்தைய மாதமான டிசம்பரில்,27 கோடி ரூபாய் அளவுக்கே முதலீடுகள் மேற்கொள்ள பட்டுள்ளன. கடந்த நவம்பரில், 7.68 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன் அதிகபட்சமாக, கடந்த, 2012ம் ஆண்டு டிசம்பரில், 474 கோடி ரூபாய், கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டு இருந்தது.
கடந்த ஜனவரி மாதத்தில், அனைத்து மியூச்சுவல் பண்டு திட்டங்களிலும் சேர்த்து, மொத்தம், 1.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுஉள்ளது.கடந்த டிசம்பர் மாதத்தில், மொத்தம், 61 ஆயிரத்து, 810 கோடி ரூபாய், மியூச்சுவல் பண்டு திட்டங்களிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|