பதிவு செய்த நாள்
13 பிப்2020
23:47
புதுடில்லிL
‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.நடப்பு காலாண்டிலேயே பங்கு வெளியீடு இருக்கும் என, எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார், கடந்த மாதமே தெரிவித்துஇருந்தார்.
இதையடுத்து, இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, இம்மாதமே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.பாரத ஸ்டேட் வங்கியின் துணை நிறுவனமான, எஸ்.பி.ஐ., கார்ட்ஸ், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 6,000 கோடி ரூபாய் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.பங்கு வெளியீட்டின் போது, 500 கோடி ரூபாய் மதிப்புக்கு புதிய பங்குகளை வெளியிட உள்ளது. மேலும், பங்குதாரர்களின், 13.05 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.எ
ஸ்.பி.ஐ., வங்கியிடம், இந்நிறுவனத்தின், 76 சதவீத பங்குகள் உள்ளன. மீதி, ‘சி.ஏ., ரோவர் ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் வசம் உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|