பதிவு செய்த நாள்
18 பிப்2020
02:52
புதுடில்லி: பொது காப்பீடு நிறுவனங்களின் பிரீமிய வருவாய், ஜனவரி மாதத்தில், 2.2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து, ஆணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜனவரி மாதத்தில், ஆயுள் காப்பீடு அல்லாத, 35 காப்பீடு நிறுவனங்களின் மொத்த பிரீமிய வருவாய், 7.2 சதவீதம் அதிகரித்து, 17 ஆயிரத்து, 226 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், 16 ஆயிரத்து, 76 கோடி ரூபாயாக இருந்தது. இவற்றில், 25 பொது காப்பீடு நிறுவனங்களின், ஜனவரி மாத பிரீமிய வருவாய், 14 ஆயிரத்து, 643 கோடி ரூபாய்.மதிப்பீட்டு மாதத்தில், ஏழு தனியார் பொது காப்பீடு நிறுவனங்களின், ஒட்டுமொத்த பிரீமியம் வருவாய், 28 சதவீதம் அதிகரித்து, 1,531 கோடி ரூபாயாக உள்ளது.
மீதமுள்ள சிறப்பு காப்பீட்டு நிறுவனங்களான, இ.சி.ஜி.சி., மற்றும் வேளாண் காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்டவற்றின் வருவாய், மதிப்பீட்டு மாதத்தில், 92 சதவீதம் அதிகரித்து, 1,052 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|