பதிவு செய்த நாள்
19 பிப்2020
06:42
எல்.ஐ.சி., நிறுவனத்திலிருந்து, இதுவரை, பங்கு வெளியீட்டுக்கான திட்டம் குறித்து எந்த தகவலும் வரவில்லை என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
அரசுக்கு நிலுவை தொகையை செலுத்தும் பிரச்னை சம்பந்தமாக, தொலைதொடர்பு துறை செயலர் அன்ஷு பிரகாஷை, வோடபோன் ஐடியா நிறுவனத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா நேற்று சந்தித்துள்ளர்.
தொலைதொடர்பு நிறுவன பிரச்னைகளால், பங்குச் சந்தைகள், தொடர்ந்து நான்காவது நாளாக, நேற்றும் சரிவை சந்தித்தன. கடன் வளர்ச்சியை அதிகரிக்கும் அளவுக்கு, ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கைகள் போதவில்லை என, பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தர நிர்ணய நிறுவனமான, இண்ட் ரா நிறுவனம், 2020- – 21 நிதியாண்டில், இந்திய ஜவுளித் துறை வளர்ச்சி குறைந்து, எதிர்மறை நிலையில் இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|