பதிவு செய்த நாள்
22 பிப்2020
02:36
புதுடில்லி: அடுத்த மாதத்தில்இருந்து, ‘டிவி’ விலை, 10 சதவீதம் வரை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், சீனாவில் இருந்து டிவிக்கான பேனல்கள் இறக்குமதியில் இடையூறுகள் ஏற்பட்டிருப்பது தான்.ஒரு டிவி விலையில், 60 சதவீதம் டிவி பேனலுக்கானதாகும். டிவியின் விலையை நிர்ணயிப்பதில், அதன் பேனலின் பங்கு மிக அதிகமாகும். இந்த பேனல்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து தான் இறக்குமதி ஆகின்றன
.சீனப் புத்தாண்டை ஒட்டி, அதிகளவில் டிவி பாகங்களை நிறுவனங்கள் இருப்பில் வைத்திருப்பினும், ‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அங்கு, சில தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டிருந்தாலும், மிகக் குறைவான ஊழியர்களே வேலை செய்து வருகின்றனர்.இத்தகைய நிலையால், டிவி பேனல்கள் விலை, 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. நிலைமைகள் சரியாவதற்கு ஒரு காலாண்டாவது தேவைப்படும். எனவே, விலைகளில் தாக்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என கருதப்படுகிறது.
தட்டுப்பாடு
இந்நிலைமை குறித்து, இந்தியாவில், ‘தாம்சன்’டிவி நிறுவனத்தின் பிராண்டு உரிமை பெற்றுள்ள, எஸ்.பி.பி.எல்., நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அவ்னீத் சிங் மார்வா கூறியதாவது:சீன பாதிப்பால், மார்ச் மாதத்திலிருந்து டிவி விலை, 10 சதவீதம் வரை அதிகரிக்கும். டிவி பேனல் விலை, 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.மேலும், மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 30 – 35 சதவீதம் அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.ஏர் கண்டிஷனர்டிவி விலை மட்டுமின்றி, ‘ஏர் கண்டிஷனர், ரெப்ரிஜிரேட்டர்’ ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது; இவற்றுக்கான கம்ப்ரஸர்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து தான் இறக்குமதி ஆகின்றன.
இது குறித்து, ‘ஹையர் இந்தியா’ நிறுவன தலைவர் எரிக் பிரகன்ஸா கூறியதாவது:மார்ச் மாத ஆரம்பத்திலிருந்து, டிவி விலை அதிகரிக்கும். அதன் தொடர்ச்சியாக, ‘ஏசி’ மற்றும் ரெப்ரிஜிரேட்டர் ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கும். பிரீஸர்களின் விலை ஏற்கனவே, 2.5 சதவீதம் உயர்ந்துவிட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
இறக்குமதி வரி
இந்நிலை குறித்து, தொழில் துறை அமைப்பான, ‘சீமா’ தெரிவித்துள்ளதாவது:டிவி தயாரிப்புக்கான ஓப்பன் செல் பேனல்கள் மற்றும் ‘சிப்’புகள் பெரும்பாலும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. சீனாவை அடுத்து, தைவான், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில், கடைசி நிலையில் பொருத்தும் வேலைகள் அதாவது, ‘அசம்பளி’ மட்டுமே செய்யப்படுகிறது. இந்நிலையில் பாதிப்புகள் தவிர்க்க முடியாததாகும்.இவ்வாறு, சீமா தெரிவித்துள்ளது. சீன இறக்குமதிபங்களிப்புபொருட்கள் சதவீதம்சூரிய ஒளி தகடுகள் 75மருந்து பொருட்கள் 69மின்னணு பொருட்கள் 67நுகர்வு பொருட்கள் 45
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|