பதிவு செய்த நாள்
29 பிப்2020
02:52
புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 4.7 சதவீதமாக உள்ளதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, கடந்த நிதியாண்டின், இதே மூன்றாவது காலாண்டில், 5.6 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 4.7 சதவீதமாக குறைந்து உள்ளது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத குறைவாகும்.இருப்பினும், இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது, வளர்ச்சி சிறிதளவு அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி, 4.5 சதவீதமாக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான, ஒன்பது மாத காலத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.1 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், 6.3 சதவீதமாக இருந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி, 5.6 சதவீதமாகவும்; இரண்டாவது காலாண்டில், 5.1 சதவீதமாகவும் திருத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சி சிறிது அதிகரித்தாலும், கொரோனா வைரஸ் தாக்குதல், இந்த வளர்ச்சியின் பயனை நாடு அடைய விடாமல் செய்து விடும் வாய்ப்பு இருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|