உணவு வினியோக வணிகம் அமேசானின் அடுத்த அவதாரம் உணவு வினியோக வணிகம் அமேசானின் அடுத்த அவதாரம் ...  மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி ...
பங்குச் சந்தைகளை வாரி சுருட்டிய, ‘கொரோனா’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
02:51

மும்பை : ‘கொரோனா’ வைரஸ் நோய் குறித்த அச்ச உணர்வால், உலகளவில் அனைத்து பங்குச் சந்தைகளும் நேற்றும் கடும் சரிவைக் கண்டுள்ளன.


உலகச் சந்தைகளின் பாதிப்பைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளும், தொடர்ந்து ஆறாவது நாளாக சரிவைக் கண்டன. பங்குச் சந்தைகள் சரிவால் ஏற்பட்ட பாதிப்புகள்:l நேற்று ஒரு நாளில் மட்டும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கொடுத்த விலை, 5.46 லட்சம் கோடி ரூபாய்l மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ நேற்று வர்த்தக இறுதியில், 1448 புள்ளிகளை இழந்து, 38297 புள்ளிகளாக சரிந்தது l தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ 431 புள்ளிகளை இழந்து, 11201 புள்ளிகளாக சரிந்தது l கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ், 6.98 சதவீதமும்;


நிப்டி, 7.28 சதவீதமும் சரிவைச் சந்தித்துள்ளனl மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், கடந்த ஆறு நாட்களில் மட்டும் இழந்தது மொத்தம், 11.77 லட்சம் கோடி ரூபாய்l சென்செக்ஸ், அதன் வரலாற்றில் இரண்டாவது முறையாக, 2015, ஆகஸ்ட், 24ம் தேதிக்குப் பின், ஒரு நாளில் அதிகபட்ச சரிவை நேற்று கண்டுள்ளது.l கடந்த வாரத்தில் இதுவரை, அன்னிய முதலீட்டாளர்கள், 9,389 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர்.


மும்பை பங்குச் சந்தையில், 2,011 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 456 பங்குகள் விலை அதிகரித்தன. 153 பங்குகளின் விலையில், எந்த மாற்றமும் இல்லைl நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸில் அதிக இழப்பைச் சந்தித்தது, ‘டெக் மகிந்திரா’ நிறுவனமாகும்l உலக பங்குச் சந்தைகள், 2008ம் ஆண்டுக்கு பின், கடந்த வாரம் தான் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளன l கடந்த, 2001ம் ஆண்டு, செப்டம்பர், 11 பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், அமெரிக்க சந்தை முதலீட்டாளர்களிடம் அதிக அச்ச உணர்வு இப்போது தான் ஏற்பட்டிருப்பதாக, நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்l உலக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், அச்ச உணர்வு காரணமாக, பாதுகாப்பான முதலீட்டை நோக்கி திரும்பியதை அடுத்து, தங்கத்தின் விலை, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை தொட்டது.


பறிகொடுத்த பிரபலங்கள்பங்குச் சந்தையில், இந்த ஆண்டில் பல பெரும்புள்ளிகள் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளனர். இவர்களின் பங்கு மதிப்பின் சரிவுக்கு கொரோனா வைரஸ் தாக்குதலும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.பிரபலம் இழப்பு ரூ.கோடியில் முகேஷ் அம்பானி: 35,500குமார் மங்கலம் பிர்லா: 6,276அஜிம் பிரேம்ஜி: 6,170கவுதம் அதானி: 3,522 கோடி ரூபாய்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)