பதிவு செய்த நாள்
29 பிப்2020
02:50
புதுடில்லி : ‘அமேசான்’ நிறுவனம், அடுத்த அவதாரத்தை இந்தியாவில் எடுக்க இருக்கிறது. இந்நிறுவனம், அடுத்தகட்டமாக, உணவு வினியோக வணிகத்தில் இறங்குகிறது.
அடுத்த மாதம், பெங்களூரில், உணவு வினியோக வணிகத்தை துவக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அமேசான் செய்து விட்டதாக செய்திகள் வருகின்றன.இந்த உணவு வினியோக வணிகம், ‘அமேசான் பிரைம் நவ்’ அல்லது ‘அமேசான் பிரெஷ்’ தளத்தில் இயங்கும் என சொல்லப்படுகிறது.மேலும், இந்த புதிய வணிகத்திற்காக, ‘அமேசான் இந்தியா’ நிறுவனம், ‘இன்போசிஸ்’ நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின், ‘கட்டமரான் வெஞ்சர்ஸ்’ நிறுவனத்துடன் கைகோர்ப்பதாக சந்தையில் சொல்லப்படுகிறது.
விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:உணவு வினியோக வணிகத்தில் அமேசான் இறங்குவது உறுதியான ஒன்று. இதற்கான வெள்ளோட்டம் எல்லாம் பெங்களூரில் பார்க்கப்பட்டுவிட்டது. வரும் மாதத்திலிருந்து, நாட்டின் பிற பகுதிகளில் அறிமுகமாகும். இவ்வாறு அவர் கூறினார். ‘ஸொமேட்டோ, ஸ்விகி’ நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக அமேசான் இருக்கும் என, கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|