பதிவு செய்த நாள்
03 மார்2020
01:46
தஞ்சாவூர்:தஞ்சாவூர் எல்.ஐ.சி., கோட்ட அலுவலகத்தில் பங்குச் சந்தை சார்ந்த இரண்டு புதிய பாலிசிகள் அறிமுக விழா நேற்று நடந்தது. முதுநிலைக் கோட்ட மேலாளர் வெங்கட்ராமன்புதிய பாலிசிகளை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது: எல்.ஐ.சி.,யின் பங்குச் சந்தை சார்ந்த இரண்டு புதிய திட்டங்கள், இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதில், ’நிவேஷ் ப்ளஸ்’ என்ற புதிய திட்டம், ஒரே தவணையில் பிரீமியம் செலுத்துவதாகும். இத்திட்டத்தில், குறைந்தபட்ச பிரீமியம், ஒரு லட்சம் ரூபாய். மற்றொரு திட்டமான ’சிப்பி’ (எஸ்.ஐ.ஐ.பி.,) என்ற திட்டத்தில், ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம், ஓராண்டு என்ற தவணைகளில் பிரீமியத்தை செலுத்தலாம். குறைந்தபட்ச ஆண்டு பிரீமியம், 40 ஆயிரம் ரூபாய்.
இந்த இரண்டு திட்டங்களிலும், 90 நாள் குழந்தை முதல், 65 வயதுடையவர்கள் வரை பாலிசி எடுக்கலாம். பாலிசி முதிர்வின்போது அன்றைய யூனிட்டுகளின் பண்டு மதிப்புத்தொகை, சில விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். பாலிசி துவங்கிய, 5 ஆண்டுகளுக்கு பின், ஒரு பகுதியை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதில், எல்.ஐ.சி., கோட்ட வணிக மேலாளர் ராம்குமார், விற்பனை மேலாளர் நேரு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|