பதிவு செய்த நாள்
03 மார்2020
01:43
மும்பை:நாட்டின் பொருளாதார மந்தநிலை மேலும் நீடிக்கும்பட்சத்தில், கார்ப்பரேட் கடனில், 10.52 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாக, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டில் தற்போதுள்ள பொருளாதார மந்தநிலை, மேலும் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும்பட்சத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கடனில், 10.52 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்த தொகை, கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் மொத்த கடன் தொகையில், 16 சதவீதமாகும்.ரியல் எஸ்டேட், வாகன துறை, எரிசக்தி உள்ளிட்ட, 11 துறைகளில் இருக்கும் அபாயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.ஏற்கனவே நிதி அழுத்தத்தில் இருப்பதாக அறியப்பட்ட நிறுவனங்களின் கடன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து, தேவையான தகுந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை, கடன் வழங்கிய நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|