பதிவு செய்த நாள்
03 மார்2020
11:04
நாடு முழுவதும், ‘மோட்டார் பம்ப் செட்’, பொறியியல் உபகரணங்கள் உள்ளிட்ட தேவைகளை கோவை பூர்த்தி செய்கிறது. கோவையில் பம்ப் செட் தயாரிப்பில் ஆயிரத்துக்கும் அதிகமான நிறுவனங்களும், உதிரிபாகங்கள் உற்பத்தியில், 5,000 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.பம்ப் செட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு, இந்திய அளவிலும் விற்பனை செய்துவருகின்றன. குறு சிறு தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் உள்நாட்டு தேவையை பூர்த்திசெய்துவருகின்றன.
விற்பனை சூடுபிடிப்புவிவசாயம் உள்ளிட்ட தேவைகளுக்கு பயன்படும் பம்ப் செட் விற்பனை மழை காலத்தில் மந்தமாகவும், வெயில் காலத்திலும் சூடுபிடிப்பதும் வழக்கம். தற்போது, கோடை துவங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு, 10 சதவீதம் விற்பனை, துவக்கத்திலேயே அதிகரித்துள்ளதால் உற்பத்தியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
போட்டியும், புதுமையும்நாட்டின், 50 சதவீத தேவையை கோவை பூர்த்திசெய்து வந்த நிலையில், வெளிமாநிலங்களும் இத்தொழிலில் களம் இறங்கியதால் போட்டியை சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கு தனித்தன்மையையும், புதுமையையும் நிரூபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.பட்ஜெட்களில் விவசாயிகளுக்கு சோலார் பம்ப் செட்கள், சோலார் சக்தி மூலம் பம்ப் செட்களுக்கு மின்சாரம் வழங்குவது, ‘ஜலசக்தி அபியான்’ திட்டம் உள்ளிட்டவை, பம்ப் செட் தொழில் வளர்ச்சிக்கு உத்வேகமளிக்கிறது. அதேசமயம், வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டால் மட்டுமே வளர்ச்சி இலக்கை எட்ட முடியும்.
‘அப்கிரேடு’ தேவைதமிழ்நாடு பம்ப் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்க (டேப்மா) தலைவர் கல்யாண சுந்தரம் கூறுகையில், ‘‘கோடை காலம் துவங்கிவிட்டதால் பம்ப் செட் விற்பனை நன்றாக உள்ளது. கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு துவக்கதிலேயே, 10 சதவீதம் பம்ப் செட் விற்பனை அதிகரித்துள்ளது.‘இது மேலும் அதிகரிக்கும் என்பதால் உற்பத்தியிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. போட்டிமிகு இக்காலகட்டத்தில் தயாரிப்பு பொருட்களை, ‘அப்கிரேடு’ செய்தால் மட்டுமே வாய்ப்புகளை தக்கவைக்க முடியும்; எந்த பொருளானாலும் தரத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு குறு, சிறு தொழில் முனைவோருக்கான விற்பனை ஒதுக்கீடு, 25 சதவீதம். அதேபோல், வெளிநாடுகளில் இருந்து மட்டுமே ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலை மாறி, உள்நாட்டு உற்பத்திக்கும் அரசு கதவுகளை திறந்துவைத்துள்ளது. இதனை தக்கவைக்க தரமும், புதுப்பித்தலும் அவசியம்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|