ஒரு நாடு... ஒரு ஜி.எஸ்.டி., : அடுத்த மாதம் முதல் புதிய முறைஒரு நாடு... ஒரு ஜி.எஸ்.டி., : அடுத்த மாதம் முதல் புதிய முறை ...  மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி:ஊக்க சலுகை திட்டம்; 2 லட்சம் பேருக்கு வேலை மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி:ஊக்க சலுகை திட்டம்; 2 லட்சம் பேருக்கு வேலை ...
வெயிலில் சூடுபிடிக்கும்... பம்ப் செட் தொழில்! தக்கவைக்க தரமும், புதுப்பித்தலும் அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2020
11:04

நாடு முழு­வ­தும், ‘மோட்­டார் பம்ப் செட்’, பொறி­யி­யல் உப­க­ர­ணங்­கள் உள்­ளிட்ட தேவை­களை கோவை பூர்த்தி செய்­கிறது. கோவை­யில் பம்ப் செட் தயா­ரிப்­பில் ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­களும், உதி­ரி­பா­கங்­கள் உற்­பத்­தி­யில், 5,000 நிறு­வ­னங்­களும் ஈடு­பட்­டுள்­ளன.பம்ப் செட் தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்ள பெரும் நிறு­வ­னங்­கள் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வ­தோடு, இந்­திய அள­வி­லும் விற்­பனை செய்­து­வ­ரு­கின்­றன. குறு சிறு தொழில் நிறு­வ­னங்­கள் பெரும்­பா­லும் உள்­நாட்டு தேவையை பூர்த்­தி­செய்­து­வ­ரு­கின்­றன.

விற்பனை சூடுபிடிப்புவிவ­சா­யம் உள்­ளிட்ட தேவை­க­ளுக்கு பயன்­படும் பம்ப் செட் விற்­பனை மழை காலத்­தில் மந்­த­மா­க­வும், வெயில் காலத்­தி­லும் சூடு­பி­டிப்­ப­தும் வழக்­கம். தற்­போது, கோடை துவங்­கி­யுள்ள நிலை­யில் கடந்த ஆண்டை காட்­டி­லும் இவ்­வாண்டு, 10 சத­வீ­தம் விற்­பனை, துவக்­கத்­தி­லேயே அதி­க­ரித்­துள்­ள­தால் உற்­பத்­தி­யா­ளர்­கள் உற்­சா­கம் அடைந்­துள்­ள­னர்.


போட்டியும், புதுமையும்நாட்­டின், 50 சத­வீத தேவையை கோவை பூர்த்­தி­செய்து வந்த நிலை­யில், வெளி­மா­நி­லங்­களும் இத்­தொ­ழி­லில் களம் இறங்­கி­ய­தால் போட்­டியை சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது. இதற்கு தனித்­தன்­மை­யை­யும், புது­மை­யை­யும் நிரூ­பிக்க வேண்­டி­யது காலத்­தின் கட்­டா­யம்.பட்­ஜெட்­களில் விவ­சா­யி­க­ளுக்கு சோலார் பம்ப் செட்­கள், சோலார் சக்தி மூலம் பம்ப் செட்­க­ளுக்கு மின்­சா­ரம் வழங்­கு­வது, ‘ஜல­சக்தி அபி­யான்’ திட்­டம் உள்­ளிட்­டவை, பம்ப் செட் தொழில் வளர்ச்­சிக்கு உத்­வே­க­ம­ளிக்­கிறது. அதே­ச­ம­யம், வாய்ப்பை சரி­யாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டால் மட்­டுமே வளர்ச்சி இலக்கை எட்ட முடி­யும்.


‘அப்கிரேடு’ தேவைதமிழ்­நாடு பம்ப் மற்­றும் உதி­ரி­பா­கங்­கள் உற்­பத்­தி­யா­ளர்­கள் சங்க (டேப்மா) தலை­வர் கல்­யா­ண­ சுந்­த­ரம் கூறு­கை­யில், ‘‘கோடை காலம் துவங்­கி­விட்­ட­தால் பம்ப் செட் விற்­பனை நன்­றாக உள்­ளது. கடந்­தாண்டை காட்­டி­லும் இவ்­வாண்டு துவக்­க­தி­லேயே, 10 சத­வீ­தம் பம்ப் செட் விற்­பனை அதி­க­ரித்­துள்­ளது.‘இது மேலும் அதி­க­ரிக்­கும் என்­ப­தால் உற்­பத்­தி­யி­லும் தீவி­ரம் காட்­டப்­பட்டு வரு­கிறது. போட்­டி­மிகு இக்­கா­ல­கட்­டத்­தில் தயா­ரிப்பு பொருட்­களை, ‘அப்­கி­ரேடு’ செய்­தால் மட்­டுமே வாய்ப்­பு­களை தக்­க­வைக்க முடி­யும்; எந்த பொரு­ளா­னா­லும் தரத்­தையே மக்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.மத்­திய பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்கு குறு, சிறு தொழில் முனை­வோ­ருக்­கான விற்­பனை ஒதுக்­கீடு, 25 சத­வீ­தம். அதே­போல், வெளி­நா­டு­களில் இருந்து மட்­டுமே ராணுவ தள­வா­டங்­கள் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட நிலை மாறி, உள்­நாட்டு உற்­பத்­திக்­கும் அரசு கத­வு­களை திறந்­து­வைத்­துள்­ளது. இதனை தக்­க­வைக்க தர­மும், புதுப்­பித்­த­லும் அவ­சி­யம்,’’ என்­றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)