வெயிலில் சூடுபிடிக்கும்...  பம்ப் செட் தொழில்! தக்கவைக்க தரமும், புதுப்பித்தலும் அவசியம்வெயிலில் சூடுபிடிக்கும்... பம்ப் செட் தொழில்! தக்கவைக்க தரமும், ... ...  வோடபோன் ரூ.  3,043 கோடி செலுத்தியது நிலுவை சுய கணகீட்டில் தவறு வோடபோன் ரூ. 3,043 கோடி செலுத்தியது நிலுவை சுய கணகீட்டில் தவறு ...
மொபைல்போன் தொழிலுக்கு ரூ.48,000 கோடி:ஊக்க சலுகை திட்டம்; 2 லட்சம் பேருக்கு வேலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மார்
2020
23:45

புதுடில்லி:இந்தியாவை, மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கில், 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை திட்டத்தை, மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது.


உலகளவில், மொபைல் போன் தயாரிப்பில், சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.அதேசமயம், மொபைல் போன் ஏற்றுமதியில், இந்தியா, ‘டாப் 10’ பட்டியலில் கூட இடம் பெறாத அளவிற்கு மிகவும் பின்தங்கியுள்ளது. எனவே, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ், உள்நாட்டில் மொபைல் போன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, விற்பனை அடிப்படையில், ஐந்து ஆண்டுகளுக்கு, 48ஆயிரம் கோடி ரூபாய் ஊக்கச் சலுகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது.


மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகம், ‘நிடி ஆயோக்’ ஆகியவை இணைந்து தயாரித்து உள்ள இந்த திட்டத்தை, மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயல்படுத்த உள்ளது. இத்திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:


மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பில், சீனா, வியட்னாம் போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. அடிப்படை கட்டமைப்பு வசதி குறைபாடு, சரக்கு போக்குவரத்து பிரச்னைகள், வட்டிச் சுமை, திறமையான வல்லுனர்களின் பற்றாக்குறை போன்றவற்றால், இந்தியா பின்தங்கியுள்ளது.அதனால், மொபைல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், உதிரிபாகங்கள் துறையில், இந்தியாவை, சர்வதேச மையமாக உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


அவற்றில் ஒன்றாக, உள்நாட்டில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அவற்றின் விற்பனை வளர்ச்சிக்கு ஏற்ப, ஐந்து ஆண்டுகளுக்கு 4 – -6 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம், ஆக.,1ல் அமலுக்கு வர உள்ளது. மொத்தம், 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான இத்திட்டம் மூலம், 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், நிறுவனங்களின் மொபைல்போன் விற்பனை, மதிப்பின் அடிப்படையில், 8.20 லட்சம் கோடியாகவும், ஏற்றுமதி 5.80 லட்சம் கோடி ரூபாயாகவும் உயரும். இதன் மூலம், மத்திய அரசுக்கு, 4,782 கோடி ரூபாய், நேரடி வரி வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


இதனால், ‘ஐபோன், கேலக்ஸி எஸ்’ போன்ற, 14ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை, தயாரிக்கும், ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள், மறைமுகமாக பயன்பெறும். இந்நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில், ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் தயாரித்து தரும், பாக்ஸ்கான், பிளக்ஸ், விஸ்ட்ரான் போன்ற நிறுவனங்கள் நேரடியாக பயனடையும்.


உள்நாட்டைச் சேர்ந்த, லாவா, கார்பன், இன்டெக்ஸ்,மைக்ரோமேக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விற்பனை அதிகரிக்கவும், ஊக்கச் சலுகை திட்டம் உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.


விஸ்வரூப வளர்ச்சி


* இந்தியாவில், மொபைல்போன் தயாரிப்பு, 2014ல், 6 கோடியாக இருந்தது. இது, தற்போது, 22 கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

* இதே காலத்தில், உள்நாட்டில் மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிறுவனங்கள் எண்ணிக்கை, மூன்றில் இருந்து, 268 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த, 2016ல், ஸ்மார்ட்போன் பயன்பாடு, 36 கோடியாக இருந்தது. இது, 2021ல், இரு மடங்கு உயர்ந்து, 78 கோடியாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

* பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய மொபைல்போன் மற்றும் உதிரிபாகங்கள் துறையில், 3.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.


சந்தை பங்களிப்பு


நிறுவனம் சதவீதம்

சாம்சங் 31.38

ஆப்பிள் 22.40

ஹூவே 8.57

ஜியோமி 7.52

ஒப்போ 4.41

எல்.ஜி., 2.89

மோட்டோரோலா 2.72

மொபிசெல் 2.65

லெனோவா 1.51

நோக்கியா 1.19


2019 நிலவரம் – சதவீதத்தில்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)