பதிவு செய்த நாள்
05 மார்2020
23:44
சென்னை:பெண் கடன் நுகர்வோர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில், 11 சதவீத பங்களிப்புடன், தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது, ‘டிரான்ஸ் யூனியன் சிபில்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, டிரான்ஸ் யூனியன் சிபில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்திய கடன் சந்தையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் படி, 2019, செப்., மாத முடிவில், இந்தியாவில், மூன்று கோடி பெண்கள் பல்வேறு விதமான கடன்களை வாங்கி உள்ளதுதெரிய வந்துள்ளது. மொத்தமாக கடன் வாங்கியோரில், பெண்களின் பங்கு, 26 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, 2013 செப்டம்பரில், 21 சதவீதமாக இருந்தது.கடந்த, 2019, மூன்றாம் காலாண்டில், 62 லட்சம் பெண்கள் கடன் வாங்குவது தொடர்பாக, விசாரணை நடத்தி உள்ளனர்.ஆறு ஆண்டுகளில் இது, ஆறு மடங்கு அதிகம். மேலும், 63 லட்சம் கடன் கணக்குகள், பெண்களால் துவங்கப்பட்டுள்ளன.
இதே போல, கடன் வாங்குவது தொடர்பாக விசாரித்த ஆண்களின் எண்ணிக்கை, இதே காலகட்டத்தில், 5.3 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், கடன் கணக்கு துவங்கிய ஆண்களின் எண்ணிக்கையும், ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|