பதிவு செய்த நாள்
12 மார்2020
00:12
புதுடில்லி:வங்கிகள் இணைப்பு குறித்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகளின் உயரதி காரிகளை இன்று சந்திக்க உள்ளார்.
இந்த மாத துவக்கத்தில், மத்திய அமைச்சரவை, 10 பொதுத் துறை வங்கிகளை நான்காகக் குறைப்பதற்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, வங்கிகள்இணைப்பு, ஏப்ரல், 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இந்நிலையில், நாளை நடைபெற இருக்கும் சந்திப்பின் போது, இணைப்புக்கான திட்டம் மற்றும் தயார் நிலை குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.
இணைப்பு திட்டத்தின்படி, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேஷனல் பேங்குடன் இணைக்கப்படும். சிண்டிகேட் பேங்க், கனரா பேங்குடன் இணைக்கப்படுகிறது.யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஆந்திரா பேங்க், கார்பொரேஷன் பேங்க் ஆகியவை இணைய இருக்கின்றன.இந்தியன் பேங்க், அலகாபாத் பேங்க் உடன் இணைகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|