பதிவு செய்த நாள்
17 மார்2020
04:02
மும்பை: கொரோனா வைரஸ் தாக்குதலை அடுத்து, ரிசர்வ் வங்கி, வட்டி குறைப்பு குறித்து, நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் முடிவெடுக்கும் என, கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட, உலகெங்கும் உள்ள, 43 மத்திய வங்கிகள், வட்டி குறைப்பை அறிவித்திருக்கும் நிலையில், இந்தியாவிலும், உடனடியாக வட்டி குறைப்பை, ரிசர்வ் வங்கி அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன.இந்நிலையில், நேற்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்.அப்போது அவர், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டம், ஏப்ரல் 3ல் நடைபெற இருப்பதாகவும், அப்போது வட்டி குறைப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.மேலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளும் அப்போது வெளியாகும் என தெரிவித்தார்.
இதையடுத்து, அடுத்த நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், வட்டி குறைப்புக்கான அறிவிப்பு உறுதியாக இருக்கும் என்பதை, சக்திகாந்த தாஸ், கோடிட்டு காட்டியிருப்பதாக, நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த சந்திப்பின்போது, யெஸ் பேங்க், வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை நாளையிலிருந்து எடுக்க எந்த தடையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், யெஸ் பேங்க் பிரச்னை மற்றும் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும்கூட, இந்திய வங்கிகள் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|