பிப்ரவரியில் குறைந்தது பணவீக்கம் பிப்ரவரியில் குறைந்தது பணவீக்கம் ... தங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்தது தங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்தது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிந்த பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
10:55

மும்பை : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் உலகம் முழுக்க கடந்த மூன்று வாரமாக நிலைகுலைந்து போய் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தியாவிலும் இதே நிலை தொடருகிறது. நேற்று இரண்டாவதாக முறையாக மிகப்பெரிய சரிவை பங்குச்சந்தைகள் சந்தித்தன. சென்செக்ஸ் 2700, நிப்டி 758 புள்ளிகள் சரிந்தன. இந்நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 475.45 புள்ளிகள் உயர்ந்து 31,865.52ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 163 புள்ளிகள் உயர்ந்து 9,360.40ஆகவும் வர்த்தகமாகின.
கடந்த காலங்களில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அநேக பங்குகள் வீழ்ந்தன. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் இப்போது பங்குகளை வாங்க தொடங்கி உள்ளனர். மேலும் ரூபாயின் மதிப்பும் சற்று ஏற்றம் கண்டது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இதற்கு மருந்து கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை சரி செய்ய ரிசர்வ் வங்கி உதவும் என கவர்னர் சக்திகாந்ததாஸ் அறிவித்து இருப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து ரூ.74.03ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)