பதிவு செய்த நாள்
17 மார்2020
10:55
மும்பை : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸால் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் உலகம் முழுக்க கடந்த மூன்று வாரமாக நிலைகுலைந்து போய் உள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன.
இந்தியாவிலும் இதே நிலை தொடருகிறது. நேற்று இரண்டாவதாக முறையாக மிகப்பெரிய சரிவை பங்குச்சந்தைகள் சந்தித்தன. சென்செக்ஸ் 2700, நிப்டி 758 புள்ளிகள் சரிந்தன. இந்நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 475.45 புள்ளிகள் உயர்ந்து 31,865.52ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 163 புள்ளிகள் உயர்ந்து 9,360.40ஆகவும் வர்த்தகமாகின.
கடந்த காலங்களில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக அநேக பங்குகள் வீழ்ந்தன. இதனால் முதலீட்டாளர்கள் அதிகளவில் இப்போது பங்குகளை வாங்க தொடங்கி உள்ளனர். மேலும் ரூபாயின் மதிப்பும் சற்று ஏற்றம் கண்டது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது அங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் இதற்கு மருந்து கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை சரி செய்ய ரிசர்வ் வங்கி உதவும் என கவர்னர் சக்திகாந்ததாஸ் அறிவித்து இருப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து ரூ.74.03ஆக வர்த்தகமானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|