பொருளாதாரத்தை குதறும், ‘கொரோனா’ ; பணப்புழக்கத்தில் சரிவை  ஏற்படுத்தும் என்கிறது பிக்கி ஆய்வுபொருளாதாரத்தை குதறும், ‘கொரோனா’ ; பணப்புழக்கத்தில் சரிவை ஏற்படுத்தும் ... ...  அன்னிய செலாவணி இருப்பு முதன் முறையாக சரிவு அன்னிய செலாவணி இருப்பு முதன் முறையாக சரிவு ...
உலக பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாகும் ; 1982, 2009ம் ஆண்டுகளில் ஏற்பட்ட நிலை உருவாகலாம் என கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2020
04:47

புதுடில்லி : உலகளவிலும், இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், உலக வளர்ச்சி மந்தநிலைக்குள் செல்லும் என்றும் ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் மந்தநிலையை சந்திக்கும் என்கின்றன.

தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும் என குறைத்து அறிவித்துள்ளது.முதலீடு மற்றும் ஏற்றுமதிகளில், கொரோனாவின் தாக்கத்தால் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்றும், இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி, 5.1 சதவீதமாக குறைந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், உலக பொருளாதார வளர்ச்சியும் சரிவைக் காணும் என்றும், அது இப்போது மந்தநிலைக்குள் சென்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.பாதிப்பு அதிகரிக்கும்பிட்ச் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இது குறித்து, பிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அடுத்து வரும் வாரங்களில் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.இதன் தொடர்ச்சியாக, முதலீடு மற்றும் ஏற்றுமதிகளில் பாதிப்பு அதிகரிக்கும். மேலும், வினியோக தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும். இதனால், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி குறித்த கணிப்பை, 5.1 சதவீதமாக குறைத்துள்ளோம். அடுத்து வரும் நிதியாண்டில், வளர்ச்சியை, 5.0 சதவீதமாக குறைத்து கணித்துள்ளோம்.

உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ம் ஆண்டில், 2.5 சதவீதமாக இருக்கும் என்று கடந்த டிசம்பரில் கணித்திருந்த நிலையில், தற்போது அதை, 1.3 சதவீதமாக குறைத்துள்ளோம்.உலக பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து விழுந்து வரும் நிலையில், அது தற்போது மந்தநிலையினுள் சென்றுவிட்டது.ரிசர்வ் வங்கிஇந்தியாவை பொறுத்தவரை, அதன் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழில் துறைகள், சீனாவை நம்பியே இருக்கின்றன. இதுவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

மேலும், யெஸ் பேங்க் தோல்வியால், நிதியமைப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது.வளர்ச்சி கீழ்நோக்கி செல்லும் நிலையில், ரிசர்வ் வங்கி, கூடுதலாக வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, ‘பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்’ நிறுவனம், கடந்த மூன்று நாட்களில், மூன்று முறை, பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றி தெரிவித்துள்ளது.

கடந்த புதன் கிழமையன்று, நடப்பு ஆண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 2.2 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், வியாழனன்று, 40 அடிப்படைப் புள்ளிகளை குறைத்து, 1.80 சதவீதமாக அறிவித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று, உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டதாகவும், வளர்ச்சி, பூஜ்ஜியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும், கடந்த, 1982, 2009ம் ஆண்டுகளில் ஏற்பட்டதை போன்ற மந்தநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும், அமெரிக்க பொருளாதாரமும் மந்தநிலையின் பிடிக்குள் விழும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)