பதிவு செய்த நாள்
22 மார்2020
04:47
புதுடில்லி : உலகளவிலும், இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், உலக வளர்ச்சி மந்தநிலைக்குள் செல்லும் என்றும் ஆய்வு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவும் மந்தநிலையை சந்திக்கும் என்கின்றன.
தர நிர்ணய நிறுவனமான, ‘பிட்ச் ரேட்டிங்ஸ்’ நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 5.1 சதவீதமாக இருக்கும் என குறைத்து அறிவித்துள்ளது.முதலீடு மற்றும் ஏற்றுமதிகளில், கொரோனாவின் தாக்கத்தால் கடும் பாதிப்புகள் ஏற்படும் என்றும், இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி, 5.1 சதவீதமாக குறைந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், உலக பொருளாதார வளர்ச்சியும் சரிவைக் காணும் என்றும், அது இப்போது மந்தநிலைக்குள் சென்றுவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.பாதிப்பு அதிகரிக்கும்பிட்ச் நிறுவனம், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
இது குறித்து, பிட்ச் ரேட்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது:இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அடுத்து வரும் வாரங்களில் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.இதன் தொடர்ச்சியாக, முதலீடு மற்றும் ஏற்றுமதிகளில் பாதிப்பு அதிகரிக்கும். மேலும், வினியோக தொடர்பில் பாதிப்புகள் ஏற்படும். இதனால், நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி குறித்த கணிப்பை, 5.1 சதவீதமாக குறைத்துள்ளோம். அடுத்து வரும் நிதியாண்டில், வளர்ச்சியை, 5.0 சதவீதமாக குறைத்து கணித்துள்ளோம்.
உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ம் ஆண்டில், 2.5 சதவீதமாக இருக்கும் என்று கடந்த டிசம்பரில் கணித்திருந்த நிலையில், தற்போது அதை, 1.3 சதவீதமாக குறைத்துள்ளோம்.உலக பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து விழுந்து வரும் நிலையில், அது தற்போது மந்தநிலையினுள் சென்றுவிட்டது.ரிசர்வ் வங்கிஇந்தியாவை பொறுத்தவரை, அதன் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட தொழில் துறைகள், சீனாவை நம்பியே இருக்கின்றன. இதுவும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
மேலும், யெஸ் பேங்க் தோல்வியால், நிதியமைப்புகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் வளர்ச்சியை பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது.வளர்ச்சி கீழ்நோக்கி செல்லும் நிலையில், ரிசர்வ் வங்கி, கூடுதலாக வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு பிட்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, ‘பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டீஸ்’ நிறுவனம், கடந்த மூன்று நாட்களில், மூன்று முறை, பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை மாற்றி தெரிவித்துள்ளது.
கடந்த புதன் கிழமையன்று, நடப்பு ஆண்டில், உலக பொருளாதார வளர்ச்சி, 2.2 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், வியாழனன்று, 40 அடிப்படைப் புள்ளிகளை குறைத்து, 1.80 சதவீதமாக அறிவித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று, உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு சென்றுவிட்டதாகவும், வளர்ச்சி, பூஜ்ஜியமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.மேலும், கடந்த, 1982, 2009ம் ஆண்டுகளில் ஏற்பட்டதை போன்ற மந்தநிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றும், அமெரிக்க பொருளாதாரமும் மந்தநிலையின் பிடிக்குள் விழும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|