பதிவு செய்த நாள்
24 மார்2020
02:48
புதுடில்லி : எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், அடுத்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.2 சதவீதமாக இருக்கும் என்று குறைத்து அறிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், 5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஏப்ரல், 1ம் தேதியிலிருந்து துவங்கும், அடுத்த நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்த, எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், தற்போது அதை, 5.2 சதவீதமாக குறைத்து கணித்து அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால், பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது.மேலும், 2021--- – 22 நிதியாண்டுக்கான கணிப்பையும், 7 சதவீதத்திலிருந்து, 6.9 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.மேலும், பணவீக்க விகிதம், அடுத்த நிதியாண்டில், 4.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இது, 4.7 சதவீதமாக இருக்கிறது.மேலும், 2021- – 22ல் பணவீக்கம், 4.2 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தற்போது, 5.15 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டில், 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும், சில அரசு அமைப்புகள், இந்த பாதிப்பு, ஜூன் அல்லது ஆகஸ்டில் மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் கணிப்புகளை மேற்கொண்டதாகவும், எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|