பிக்னிக்கிலும், ‘பார்பிக்’ பிக்னிக்கிலும், ‘பார்பிக்’ ...  பொது காப்பீட்டு பிரீமியம் வசூல் அதிகரிப்பு பொது காப்பீட்டு பிரீமியம் வசூல் அதிகரிப்பு ...
நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் குறைத்து கணித்த எஸ் அண்டு பி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2020
02:48

புதுடில்லி : எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், அடுத்த நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.2 சதவீதமாக இருக்கும் என்று குறைத்து அறிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், 5 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.



ஏப்ரல், 1ம் தேதியிலிருந்து துவங்கும், அடுத்த நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 6.5 சதவீதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்த, எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம், தற்போது அதை, 5.2 சதவீதமாக குறைத்து கணித்து அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால், பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது.மேலும், 2021--- – 22 நிதியாண்டுக்கான கணிப்பையும், 7 சதவீதத்திலிருந்து, 6.9 சதவீதமாக குறைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



இந்த மார்ச் மாதத்துடன் முடிவடையும், நடப்பு நிதியாண்டுக்கான வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.மேலும், பணவீக்க விகிதம், அடுத்த நிதியாண்டில், 4.4 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது இது, 4.7 சதவீதமாக இருக்கிறது.மேலும், 2021- – 22ல் பணவீக்கம், 4.2 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் தற்போது, 5.15 சதவீதமாக இருக்கும் நிலையில், அடுத்த நிதியாண்டில், 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது.


கொரோனா வைரஸ் பரவல் குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும், சில அரசு அமைப்புகள், இந்த பாதிப்பு, ஜூன் அல்லது ஆகஸ்டில் மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் கணிப்புகளை மேற்கொண்டதாகவும், எஸ் அண்டு பி குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)