பதிவு செய்த நாள்
25 மார்2020
04:47
மும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பால், பங்குச் சந்தைகள் உள்ளிட்டவை, ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும் நிலையில், தங்கம் மிகச் சிறந்த முதலீடாக இருக்கும் என்று, உலக தங்க கவுன்சில் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இந்த கவுன்சிலின், இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர்,பி.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்துள்ளதாவது:இந்திய முதலீட்டாளர்களுக்கு, முன் எப்போதையும் விட, தங்கம் மீதான முதலீடு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இது போன்ற நிச்சயமற்ற நிலையில், கொந்தளிப்புகளுடன் சந்தைகள் இருக்கும் நிலையில், தங்கத்தின் மீதான முதலீடு, அதிக லாபம் மிக்கதாக இருக்கிறது. பணவீக்கத்துக்கு எதிரான ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் தற்போது தங்கம் விளங்குகிறது.
இதை, தற்போதைய தரவுகள் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன.பங்குச் சந்தைகளின் நிலையற்ற தன்மைக்கு எதிராகவும், பணவீக்கத்திலிருந்து பாதுகாப்பதாகவும் தங்கம் விளங்குகிறது.கடந்த, 1981ம் ஆண்டிலிருந்து, தங்கத்தின் சராசரிஆண்டு வருமானம், 10 சதவீதமாகும். இது, சில்லரை விலை பணவீக்கத்தை விஞ்சியுள்ளது. சில்லரை விலை பணவீக்கம், இந்த காலகட்டத்தில், 7.35 சதவீதமாக உள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|