பதிவு செய்த நாள்
28 மார்2020
03:38
புதுடில்லி : ஈசாப் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், 976 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக, கடந்த ஜனவரி மாதத்தில், செபிக்கு விண்ணப்பம் செய்திருந்தது. இதையடுத்து, தற்போது செபி அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த பங்கு வெளியீட்டின் போது, 800 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 176.2 கோடி ரூபாய்க்கு நிறுவனர்களின் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு முன், 300 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்வதற்கான முயற்சி குறித்தும் ஆலோசித்து வருகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் திரட்டவிருக்கும் நிதியின் அளவு குறையும்.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ‘ஆக்சிஸ் கேப்பிட்டல், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் மற்றும் ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.கேரளாவை அடிப்படையாக கொண்ட இந்த வங்கி, 16 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் செயல்பட்டு வருகிறது. இதற்கு மொத்தம், 403 கிளைகள் உள்ளன; 37.3 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|