பதிவு செய்த நாள்
28 மார்2020
03:39
புதுடில்லி : எதிர்பாராதவிதமாக, கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு, அது பொருளாதாரத்தில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், நாட்டின் வளர்ச்சி குறித்து, சில நிறுவனங்கள் தங்கள் கணிப்பையும், எதிர்பார்ப்பையும் அறிவித்துள்ளன.மூடிஸ் சர்வீஸ்நடப்பு ஆண்டான, 2020ம் ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2.5 சதவீதமாக இருக்கும். இதற்கு முன், 5.3 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.இந்த வளர்ச்சி குறைவால், நாடு, அதன் வருமானத்தில் கடுமையான வீழ்ச்சியைக் காணக்கூடும்.இந்தியாவில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில், கடுமையான பணப் புழக்க சிக்கல்கள் இருப்பதால், கடன் வளர்ச்சியும் தடைபட்டுள்ளது.
சமீபத்தில், 21 நாட்களுக்கு நாடு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வணிகங்களும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலையின்மை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நாட்டின் வளர்ச்சி, நடப்பு ஆண்டில் குறைந்து, அடுத்த ஆண்டில் அதாவது, 2021ல் அதிகரிக்க துவங்கும். உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, நடப்பு ஆண்டில், இதற்கு முன் கணித்திருந்த நிலையான, 2.6 சதவீதத்திலிருந்து, தற்போது, 0.5 சதவீதம் குறைக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டில் இது, 3.2 சதவீதமாக உயரும்.அடுத்த இரண்டிலிருந்து நான்கு மாதங்களில், தேவைகள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், வணிகங்கள், தனிநபர்கள் வருமானமும் பாதிக்கப்படும். இவை, பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும்.அடுத்த சில மாதங்களில், உலகளவில் வேலையின்மை பிரச்னை மிகவும் அதிகரிக்கும். எஸ்.பி.ஐ., எகோரேப்தொற்று நோய் பாதிப்பால், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்ததை, 4.5 சதவீதமாக குறைத்துள்ளோம்.
மேலும், அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி, 2.6 சதவீதமாக குறைந்து இருக்கும் என்று கணித்துள்ளோம். நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும், வளர்ச்சி, 2.5 சதவீதமாக குறைந்து இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.கிரிசல் நிறுவனம்பொருளாதார செயல்பாடுகள் முடங்கி இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில், 3.5 சதவீதமாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வளர்ச்சி, 5.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.
அரசு, 21 நாட்கள் முடக்கத்தை அறிவித்திருப்பதை அடுத்து, நோய் தொற்றின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதே சமயம், பொருளாதாரத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொற்று நோயால், 2008ம் ஆண்டு பொருளாதாரத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டதை போல பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, வரலாறு காணாத உயிர் பலியையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது. அடுத்த நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து, மிதமாக மீளும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு நிறுவனங்கள் கணிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|