பதிவு செய்த நாள்
09 ஏப்2020
22:50
புதுடில்லி:கொரோனா பாதிப்பால், நாடு முடக்கப்பட்ட நிலையில், நிறுவனங்கள், தங்களுடைய பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கும் தடை இருந்தது.இந்நிலையில், மத்திய அரசு, நிறுவனங்கள் அவசரகால கூட்டத்தை கூட்டுவதற்கு, தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
தரவு பட்டியல்
காணொலி மூலம் கூட்டம் கூட்டுவதற்கும், திட்டங்களுக்கான அனுமதியை பெறுவதற்கு, எலக்ட்ரானிக் வாக்களிப்பை பெற்றுக்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம், 1,000 பங்குதாரர்களைக் கொண்ட, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட
நிறுவனங்கள், தங்களது பொதுக் குழு கூட்டத்தை கூட்டுவதற்கும், எலக்ட்ரானிக் முறையில் திட்டங்களை அனுமதிப்பதற்கான வாக்குகளைப் பெறுவதற்கும், மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத பிற நிறுவனங்கள், மின் அஞ்சலை பயன்படுத்தி, பங்குதாரர்களின் அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பங்குதாரர்களின் அனுமதி குறித்த தரவுகளை பாதுகாத்து வைத்துக் கொள்ளுமாறும்,
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், வெளிப்படைத்தன்மையை தொடரும் வகையில்,
தீர்மானங்களை அதன் இணையதளங்களில் வெளியிடுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுஉள்ளது.
அனுமதி
மேலும், அனைத்து தீர்மானங்களையும், 60 நாட்களுக்குள்ளாக, நிறுவன பதிவாளர்
அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுஉள்ளது.இதற்கு ஏதுவாக அனைத்து தீர்மானங்கள் குறித்தும் அவற்றுக்குபங்குதாரர்கள் வழங்கிய அனுமதிகளையும் நிறுவனங்கள், தங்களின் இணைய தள பக்கத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பங்கு தாரர்கள் கூட்டத்துக்கு நேரடியாக வர வேண்டிய தேவை இருக்காது.
இந்த அனுமதி, ஜூன் 30 வரை மட்டுமே செல்லுபடியாகும். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில், நிறுவனங்கள், நிர்வாக குழு கூட்டத்தை காணொலி மூலமாக நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.தற்போது, பொது குழு கூட்டத்தையும், காணொலி மூலம் நடத்தி கொள்ளவும், மின்னணு முறையிலான வாக்குகளை பெறவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|